லெதண்டியில் ஆர்ப்பாட்டம் – நோட்டன் அட்டன் மார்க்க போக்குவரத்து ஸ்தம்பிதம்

217

அட்டன் லெதண்டி குரூப் தோட்டத்தொழிலாளர்கள் சம்பளவுயர்வு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நோட்டன் அட்டன் பிரதான பாதையில் காசல்ரீ கடைவீதி சந்தியிலே 29.09.2016 அதாவது இன்றைய தினம் காலை 10 மணிமுதல் பாதையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 1 மணித்தியாலங்கள் வரை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தினால் நோட்டன் ஒஸ்போன் லக்ஷபான கினிகத்தேன மார்க்கங்களுக்கான போக்குவரத்து தடைப்பட்டது.

கார்பெக்ஸ் லெதண்டி மால்புரோ புரொடக் தோட்டங்களைச்சேர்ந்த தொழிலாளர்கள் கலந்துகொண்டு ஆயிரம் ரூபாய் சம்பளத்தை வழங்க தோட்ட கம்பனி இணங்கவேண்டும். தோட்டத்தை நடாத்த முடியாத கம்பனிகள் நிலத்தை தொழிலாளர்களுக்கு பிரித்துக்கொடு. தீபாவளிக்கு முன் சம்பளவுயர்வு கிடைக்காவிடில் பாரிய போராட்டங்கள் வெடிக்கும். அத்தோடு கருப்புக்கொடி கட்டி கருப்பு தீபாவளியை கொண்டாடுவோம் என்றனர். ஆர்ப்பாட்டத்தின் பின்னர் தோட்ட முகாமையாளரிடம் மகஜரொன்றையும் கையளித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

தகவலும் படங்களும்:-

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

unnamed-1

unnamed-2

unnamed-3

unnamed-4

unnamed-5

unnamed

SHARE