பாணமை மக்களின் காணிகளை விடுவிக்க கோரி யாழில் கையெழுத்து வேட்டை

239
 625-117-560-350-160-300-053-800-210-160-90

பாணமை மக்களின் காணிகளை விடுவிக்க வேண்டுமென நல்லாட்சி அரசாங்கத்தினால் வழங்கிய அமைச்சரவை தீர்மானத்தினை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி யாழில் துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், பொது மக்களிடம் கையெழுத்து வேட்டை போராட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று வியாழக்கிழமை தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது. இதன்போது மக்களிடம் துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டது.

குறித்த துண்டுப்பிரசுரத்தில்,

பாணமை மக்களிடமிருந்து கையகப்படுத்திய காணிகளை உரியவர்களிடம் கையளிக்க நீதியை நிலை நாட்டுங்கள், கிராமங்களில் மீளக்குடியமர்வதற்குத் தேவையான வீடுகளை உள்ளிட்ட சகல வசதிகளையும் பெற்றுக்கொடுங்கள்.

2010 ஆம் ஆண்டு பலாத்காரமாக அப்பகுதி மக்கள் விரட்டியடிக்கப்பட்டதோடு மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தினால் கைப்பற்றிக்கொள்ளப்பட்டது. இதனால் அந்தப்பகுதி மக்களின் வாழ்வாதார உரிமைகள் வெளிப்படையாகவே மீறப்பட்டுள்ளன.

எனவே, மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்டமைக்கு அமைவாக காணிகளை மீண்டும் மக்களுக்கு வழங்குமாறும், மார்ச் 30ஆம் திகதி பொத்துவில் மாவட்ட நீதிமன்றினால் பாணமை மக்களின் காணிகளை மீண்டும் வழங்குமாறு அளிக்கப்பட்ட தீர்ப்பினை மதித்து மக்களின் காணிகளை மீளக்கையளிக்குமாறும் துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

625-0-560-320-160-600-053-800-668-160-90-4 625-0-560-320-160-600-053-800-668-160-90-5 625-0-560-320-160-600-053-800-668-160-90-6

 

 

SHARE