கிழக்கு பல்கலைகழக கலைகலாசாரபீட மாணவர்களிடத்தில் ஒற்றுமை மிக மிக அவசியமானது என கலைத் திருவிழா ஏற்பாட்டுக் குழுத்தலைவர் எஸ். டினேஸ் தெரிவித்துள்ளார்.
கிழக்கு பல்கலைகழக கலைலாசார பீட மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2016ஆம் ஆண்டுக்கான கலைத் திருவிழா நிகழ்வானது இன்றைய தினம் பல்கலைகழக நல்லையா மண்டபத்தில் இடம் பெற்றது.
இதன்போதே அவர் மேற்கொண்டவாறு தெரிவித்துள்ளார். இங்கு அவர் தொடந்து கருத்துத் தெரிவிக்கையில்,
கிழக்கு பல்கலை கலைகலாசார பீட மாணவர்களிடத்தில் காணப்படுகின்ற சரியான சகோதரத்துவம் மற்றும் ஒற்றுமையின்மை காரணமாக கலைத்திரு விழாவினை சரியான முறையில் கொண்டு செல்ல முடியாமால் காணப்பட்டது.
கலைப்பீட பட்டதாரிகள் என்றால் தரம் குறைந்தவர்களாகவும், தற்கால சமூகத்தோடு சேர்ந்து இயங்க கூடிய ஆற்றல் குறைந்தவர்களாகவும் கருதும் ஒரு தப்பான சிந்தனை சமூகத்தில் காணப்படுகின்றது.
அத்துடன் கலைகலாசார மாணவன் என்ற ரீதியில் பல குறைபாடுகளை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
எமது கலைகலாசார கலைத் திட்டத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற சான்றிதழ்களில் பல்கலைகழக பீடாதிபதியின் உறுதிப்படுத்தல்களை மேற்கொள்வதற்கு செயற்பாடுகள் இடம்பெறுகின்றபோது அது இன்னும் முன்னேற்றகரமாக அமையும் என்பதை சுட்டிக்காட்டுகின்றேன்.
அதுமட்டுமின்றி கிழக்கு பல்கலையினைப் பொறுத்தவரையில் அதிகளவில் கலைகலாசார பீட மாணவர்களின் எண்ணிக்கை அதிகம், ஆனால் கலைத் திருவிழா போட்டிகளில் குறைந்த பட்ச மாணவர்களே போட்டிகளில் கலந்து கொண்டுள்ளதை காணக் கூடியதாவுள்ளது. எதிர் காலத்தில் இந்த நிலைமை மாறாவேண்டும் என தெரிவித்தார்.
நடைபெற்ற கலைத் திருவிழா நிகழ்வுக்கு பல்கலையின் உபவேந்தர் உட்பட கலைகலாசார பீடாதிபதி, துறைத் தலைவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.
நிகழ்வின்போது கலைகலாசார துறை மாணவர்களிடையே கடந்த காலங்களில் நடாத்தப்பட்ட போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றியீட்டிய மாணவர்களுக்கு உபவேந்தர் அவர்களினால் நினைவுச் சின்னங்களும் வழங்கிவைக்கபட்டது.