சம்பளவுயர்வு கோரி 4வது நாளாகவும் தொடரும் ஆர்ப்பாட்டம் – கொடும்பாவியும் எரிப்பு

252

சம்பளவுயர்வுகோரி மலையகத்தின் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நான்காவது நாளாகவும் தொடர்ந்தவண்ணம் உள்ளது.

அட்டன் சாஞ்சிமலை பிரதான வீதியில் பட்டல்கல சந்தியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டதில் முதலாளிமார், சம்மேளனத்தின் அதிகாரி ரொசான் துரையின் கொடும்பாவி எறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

29.09.2016 அன்று காலை 9 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தினால் அட்டன் சாஞ்சிமலை, போடைஸ், டயகம மார்க்கத்திற்கான போக்குவரத்துத் தடைப்பட்டது.

பட்டல்கல பிரதேசத்தைச்சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் 500க்கும் அதிகமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு ஆயிரம் ரூபாய் சம்பளத்தை வழங்க முதலாளிமார் சம்மேளனம் முன்வரவேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

unnamed-2

unnamed-3

unnamed-4

unnamed-5

unnamed-6

unnamed-7

SHARE