வவுனியாவில் சிங்கள இனவாதிகள் முதலமைச்சரின் கருத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!
நடந்து முடிந்த எழுகதமிழ் பேரணியின் எதிரொலியாக இன்று வவுனியாவில் கொமர்சல் வங்கியின் முன்பு ஆரம்பிக்கப்பட்ட சிங்கள இனவாதக் கட்சிகள் இணைந்து ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை மேற்கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டமானது காமினி மகாவித்தியாலம் வரை முன்நகர்த்தப்பட்டது. சமாதான நிலைப்பாட்டை சீர்குழைக்கும் வகையில் இந்த சிங்களப் பேரினவாதிகள் இந்த ஆர்ப்பாட்டத்தை நிகழ்த்தியுள்ளனர். தமிழ் மண்ணில் சிங்களவர்கள்இ சிங்கள இனவாதிகளும் வந்து ஆர்ப்பாட்டம் நடத்துவதை வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர்களும்இ மாகாணசபை உறுப்பினர்களும் கைகட்டி வேடிக்கை பார்த்து நிற்கின்றமையானது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எழுக தமிழ்ப்பேரணியானது தமிழ் மக்கள் பேரவையால் முன்னெடுக்கப்பட்டது. இதில் ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எவ், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழர் விடுதலைக் கூட்டணி, முதலமைச்சர் ஆகியோர் இணைந்து இந்த எழுக தமிழ் பேரணியை நடாத்தியிருந்தனர். தற்பொழுது வவுனியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சிங்களவர்களின் ஆர்பாட்டம் தொடர்பில் மௌனித்தவர்களாகவே இவர்கள் இருக்கின்றனர். எழுக தமிழ்ப் பேரணியில் முதலமைச்சரின் கருத்து வரவேற்கத்தக்கது. அதில் இனவாதத்தை துண்டும் வகையில் அவரின் உரை அமையப்பெறவில்லை. ஆனால் இதனைக் குழப்பும் நோக்கில் சம்பந்தன்இ சுமந்திரன் ஆகியோரினால் இந்த சிங்களப் பேரினவாதக் கட்சிகள் ஏவப்பட்டிருக்கின்றார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
முதமைச்சர் விக்கினேஸ்வரன் மீதும் அவர் சிங்களப் பேரினவாதத்துடன் இரண்டறக் கலந்திருக்கின்றார் என்பதனையும் இன்று வவுனியாவில் இடம்பெற்ற சிங்களப் பேரினவாதிகளின் ஆர்ப்பாட்டம் எடுத்துக் காட்டுக்கின்றது.
சிங்கள மக்களும் எல்லோரும் இனவாதிகளாக இருப்பவர்கள் அல்ல. முதலமைச்சர் விக்கிணேஸ்வரனுடைய செயற்பாடுகளில் சந்தேகத்திற்கிடமாகவே அமையப்பெற்றுள்ளது.
குறிப்பாக முதலமைச்சரின் சத்தியப்பிரமானத்தை மஹிந்த ராஜபக்ஸ முன்னிலையிலேயே எடுத்துக் கொண்டார் அதன் பிற்பாடு வடமாகாண சபையில் ஆயுதக்கட்சிகளுடன் கடமையாற்றுவதற்கு விருப்பம் இல்லை என்ற கருத்தைத் தெரிவித்திருந்தார். பின்னர் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் வீட்டுக்கு வெளியில் வந்து வாக்களிக்க வேண்டும் என்று கூறி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்குவதை மறுத்துவிட்டார். தொடர்ந்து வந்த இவருடைய செயற்பாடுகள் அணைந்தும் மஹிந்த ராஜபக்சவினுடைய நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே செயற்பட்டு வந்துள்ளது.
ஆனாலும் அவர் தமிழ் மக்கள் தொடர்பாக எழுக தமிழ் பேரணியில் ஆற்றிய உரையின் நிமித்தமாக இன்று சிங்கள பேரினவாதிகள் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது ஏற்றுக் கொள்ள முடியாததொன்று. நல்லினக்கம் என்று கூறிக்கொள்ளும் அதே நேரம் மறுபக்கத்தில் இந்த அரசாங்கமும் தனது கோர முகத்தை தமிழ் மக்களுக்கு வெளிப்படுத்தியுள்ளது.
தமிழ் மக்கள் பேரவையால் ஏற்படு செய்யப்பட்ட இந்த எழுக தமிழ்ப்பேரணியானது தற்போதுள்ள அரசியல் நிலைப்பாட்டிற்கு அமைய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதா என ஆராயப்படவேண்டும்.
பேரயையினுடைய நடவடிக்கைகள் தமிழ் மக்களுடைய தீர்வுத்திட்டத்தை குழப்புவதாகவே அரசாங்கமும்இ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அறிவித்துள்ளது. மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் இந்தப் பேரவையுடன் கூட்டுச் சேர்ந்து மீண்டும் தனது ஆட்சியைக் கொண்டு வர எத்தனிக்கின்றது. ஏற்கனவே அரசாங்கத்திடம் கையேந்தி பிழைப்பு நடத்திய ஆயுதக் கட்சிகளின் தலைவர்கள் இந்தப் பேரவையில் இருக்கின்றார்கள். தற்பொழுது இருக்கக்கூடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது ஒரு பலம் பொருத்திய கட்சியாகவே இருக்கின்றது. இதனை தமிழ் மக்கள் பேரவையாக இருந்தாலும் சரிஇ தமிழ் விடுதலைக் கூட்டணியாக இருந்தாலும் சரிஇ தமிழ் மக்;கள் தேசிய முன்னணியாக இருந்தாலும் சரி சிங்கள தேசம் இனவாதத்தைக் கக்குகின்ற பொழுது ஒன்றிணைந்து செயற்படவேண்டும்.
இந்த தமிழ் மக்கள் பேரவையும்இ முதலமைச்சர் விக்கினேஸ்வரனும் மஹிந்த ராஜபக்சவின் கரங்களைப் பலப்படுத்தும் நோக்கிலேயே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பது அண்மைக்கால வெளிப்பாடாக தோற்றம் பெற்றுள்ளது. தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டத்தில் நாம் நேர்த்தியாக பயணிக்கின்றோம் என்று கூறி தமிழ் மக்களை உசுப்பேத்தி மீண்டுமொரு ஆயுதப் போராட்டத்திற்கு இட்டுச் செல்வதன் மூலம் இந்தப் பேரவையானது எதைச் சாதிக்கப்போகின்றது என்ற கேள்வியும் எழுப்பப்பட்டிருக்கின்றது.
வானத்தால் போன சனியனை (முதலமைச்சர் விக்கினேஸ்வரன்) ஏணி வைத்து இறங்கிய இரா.சம்பந்தனும், சுமந்திரனும் இதற்கு பதில் கூறவேண்டும். தமிழர் பிரதேசத்தில் சிங்கள இனவாதிகள் வந்து ஆர்ப்பாட்டத்தை நடத்துகின்றார்கள் என்றால் அது தமிழ் மக்களை அவமதிக்கும் ஒரு செயலாகும். பாராளுமன்ற உறுப்பினர்களும்இ தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கின்ற அனைத்துக் கட்சிகளும் இதனைவிட தலையில் முக்காடு போட்டுக் கொண்டு திரிவது நல்லது.
தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்த காலகட்டத்தில் தமிழினம் அழித்தொளிக்கப்படுகின்ற பொழுது தமிழ் மக்களுக்கு ஆதவாக இந்த சிங்கள இனவாதிக் கட்சிகளும் சரி, அரசாங்கமும் சரி எங்காவது இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டார்களா? தமிழீப் போராட்டமும், தமிழ் மக்கள் அழிவதையும் பார்த்துக் கைகொட்டிச் சிரித்தார்கள் அப்பொழுது அரசாங்கத்துடன் ஒட்டிக் கொண்டிருந்த ஆயுதக்கட்சிகள் அணைத்தும் தமிழ் மக்களுக்கும், தமிழ் மக்கள் போராட்டத்துக்கும் எதிராகச் செயற்பட்டார்கள்.
இராணுவத்தால் கொடுக்கப்பட்ட அட்பசொட்ப சலுகைகளுக்காக அதனை வாங்கி சாப்பிட்டுக் கொண்டு இவருடைய அரசியல் வாழ்க்கையை நடாத்தியிருந்தார்கள். எங்கும் இவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருந்து குழப்பம் விழைவிப்பதை அவதானிக்க முடிகின்றது.
இத்தகைய செயற்பாடுகளை தடுத்து நிறுத்த வேண்டும். தேர்தல் காலத்தில் தமிழரசுக் கட்சி ஆசனப் பகிர்வீட்டை பகிர்கின்ற பொழுது அவர்களது காலைக் கையைப் பிடித்து எமக்குமொரு ஆசனத்தைத் தாருங்கள் என்று கேட்ட ஆயுதக் கட்சிகள் தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்ற பின் தமது அதிகாரத்தைப் பயன்படுத்துகின்றனர். கூட்டமைப்புக்குள் இருக்கின்ற செயற்பாடுகளை வெளிச்சம் போட்டு காட்டுகின்றனர். இதனால் பல்வேறுபட்ட கருத்து மோதல்கள் இக்கட்சிக்குள் உருவாகியுள்ளது. அதனுடைய வெளிப்பாடே தமிழ் மக்களப் பேரவையும்இ எழுக தமிழ் எழுச்சியும் ஆகும்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஸ் பிரமேச்சந்திரன், சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஆகியோருடைய அரசியல் என்பது அதிகாரப் போட்டி அரசியலே! இவை மாற்றப்படவேண்டும். சிங்களப் பேரினவாதிகள் எதிர்வரும் காலகட்டத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதை இவர்குளும் தடுத்து நிறுத்தவேண்டும். தென்னிலங்கையில் மஹிந்த ராஜபக்ச ஒரு ஆர்பாட்டத்தை நிகழ்த்தியிருந்தார். அந்த ஆர்ப்பாட்டமானது தனது சுயநல அரசியலை கொண்டு செல்வதாகவே அமைந்தது.
இனவாதத்தை தோற்றுவிக்கும் ஆர்ப்பாட்டமாக அமையப்பெறவில்லை. அது அவருடய ராஜதந்திர நகர்வு. அதனைப் போன்று இவர்கள் இந்த எழுக தமிழ்ப் பேரணியையும் நடாத்தியிருக்க வேண்டும். வவுனியாவில் தமிழினத்திற்கு எதிராக, முதலமைச்சருக்கு எதிராக, எழுக தமிழ் பேரணிக்கு எதிராக சிங்கள இனவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தை இவர்கள் அனைவரும் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். அந்த தைரியம் இவர்களுக்கு இல்லாத பொழுது சிங்கள தேசம் மீண்டும் எம்மை அடங்கியாள ஒரு வழியை ஏற்படுத்தும்.
ஆகவே மீண்டும் எமது தமிழினத்தை முப்பது ஆண்டுகளுக்கு முன் திரும்பிப் பார்க்க வைக்கின்றது. இதனை நாம் நன்கு விளங்கிக் கொள்ளவேண்டும். முதலமைச்சர் அவர்கள் பிழையான வழியில் செல்கின்றார் என்றால் அவரைத் தட்டிக் கேட்க வேண்டிய பொறுப்பு தமிழரசுக் கட்சியின் தலைவர்களுக்குள்ளது. காரணம் அவர்களளேயே கொண்டு வரப்பட்டவர் விக்கினேஸ்வரன்.
இன்று வவுனியாவில் இடம்பெற்றிருக்கின்ற சிங்கள இனவாதிகளுடைய ஆர்ப்பாட்ட பேரணிக்கு இவர்கள் அனைவரும் மிகமுக்கிமான குற்றவாளிகளாகக் கருதப்படுகின்றனர். இதற்குப் பதில் கூறுவார்களா தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும், தமிழ் மக்கள் வேரவையும்? தமிழ் இனம் அடக்கி, ஒடுக்கப்படுகின்ற போதெல்லாம் சிங்கள இனவாதிகள் எம்மினத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடாத்துகின்ற பொழுது உரிய முறையில் தக்க பதிலடி கொடுக்காவிட்டால் மீண்டும் இலங்கையில் ஒரு இரத்த ஆறு ஓடும் என்பதில் மாற்றமில்லை.
இவ்வாறு சுயநல அரசியலைச் செய்கின்ற தமிழ் மக்களின் அரசியல் தலைவர்கள்இ கட்சித் தலைவர்கள் நீங்கள் அரசியலை நடத்துவதை நிறுத்திவிட்டு வெள்ளைத்துண்டுடன் வீதியில் பிச்சையெடுப்பதே மேல்…. எதைச் செய்ப்போகின்றோம் என்பதை தீரமானித்துக் கொள்ளுங்கள். தமிழ் மக்கள் கட்சிகள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து தமிழ் மக்களுக்கான தீர்வினைப் பெற்றுக் கொடுக்கப் போகின்றீர்களா? அல்லது எமக்குள் பிளவுகள் இருக்கின்றது என்பதைக் காண்பிக்கப் போகின்றீர்களா? தமிழ் மக்களின் எதிர்காளம் என்ன?
இரணியன்