சன்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பில் முக்கிய குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய போவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
2009ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட லசந்த விக்ரமதுங்க தொடர்பில் கொகுவல பிரதேசத்தில் இருந்த இராணுவ முகாமை சேர்ந்தவர்களே தொடர்பு பட்டுள்ளதாகவும் பொலிசார் கூறியுள்ளனர்.
மேலும் விஷேட பயிற்சி பெற்ற இராணுவத்தினரே லசந்தவை கொலை செய்துள்ளதாகவும், அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு ஆணையிட்டவர்களை கூடிய விரவில் கைது செய்யப்படுவார்கள் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை ஏற்கனவே லசந்தவின் கொலை தொடர்பில் இராணுவ புலனாய்வு அதிகாரி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும் முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா லசந்தவின் கொலையில் சம்பந்தப்பட்டுள்ளதாக பலவிதமான குற்றச்சாட்டுகள் காணப்பட்டு வருகின்றது.
தற்போது இராணுவத்தினர் கைது செய்யப்பட்டால் அதற்கு சரத்பொன்சேகா பதில் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். அப்போது சரத் பொன்சேகா விசாரணைக்கு உட்படுத்தப்பட்டால் அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயவும் விசாரணைக்கு முகம் கொடுக்க நேரிடும்.
எவ்வாறாயினும் இராணுவத்தினர் கைது செய்யப்படும் போது அவர்களுக்கு ஆணையிட்டவர்கள் என்ற பட்டியலில் பொன்சேகாவும், கோத்தபாயவும் சேர்ந்து விடுவார்கள் என்றே கூறப்படுகின்றது.
இராணுவத்தினர் கைது செய்யப்பட்டால் பொன்சேகாவும், கோத்தபாயவும் மஹிந்தவும் கூட பதில் சொல்ல நேரிடும் என்பதே உண்மை. அப்போது முக்கிய குற்றவாளி இணங்காணப்பட்டு விடுவார்.
ஏற்கனவே பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் கொலை வழக்கின் குற்றவாளியான துமிந்த சில்வாவிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதே போன்று லசந்தவின் கொலையில் கோத்தபாயவிற்கு அல்லது பொன்சேகாவிற்கு மரண தண்டணை கொடுக்கப்படுமா என்றும் அரசியல் நோக்குனர்கள் சந்தேகங்களை வெளியிட்டுள்ளனர்.