ஆரம்பம், ஆடுகளம் போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை டாப்ஸி. மும்பையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, பாலியல் தொல்லை தரும் ஆண்களை பார்த்து பெண்கள் பயப்படக்கூடாது மாறாக அவர்களுக்கு தகுந்த பதிலடி தர வேண்டும்.
தவறு செய்யும் ஆண்கள் பெண்களை ஏறேடுத்து பார்க்க பயப்படும் வகையில் அந்த பதிலடி இருக்க வேண்டும். பாலியல் குற்றத்தில் ஈடுபடும் ஆண்களுக்கு கடுமையான தண்டணை விதிக்கபட வேண்டும் அப்போது தான் நாட்டில் பாலியல் குற்றங்கள் குறையும் என அவர் கூறினார்.
மேலும், பெற்றோர்கள், வெளியில் அதிகம் சுற்ற கூடாது என தங்கள் மகள்களை மட்டும் கண்டிக்க கூடாது, தங்கள் மகன்களையும் கண்டிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.