மஹிந்த வழியில் மக்களை ஏமாற்றிய மைத்திரியின் மகள்!

820

images

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகளான சத்துரிக்கா சிறிசேன, மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளுடன் பொலன்நறுவை மாவட்ட மக்களின் குறைகளை ஆராய்ந்து அதற்கு தீர்வு வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தார்.

இதன்போது ஜனாதிபதியின் கீழ் மகாவலி அமைச்சின் அதிகாரிகளை இணைத்துக் கொண்டு பொலன்நறுவை, வெலிகந்த, மகாவலி பகுதி மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்காக அவர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

குறைந்த பட்சம் தங்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அங்கு வசிக்கும் மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

புதிய அரசாங்கத்தின் கீழ் கூடிய விரைவில் இப்படியான அப்பாவி மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கே தான் அங்கு வருகை தந்துள்ளதாகவும், தேவையற்ற பிரச்சாரங்களை பெற்றுக் கொள்ள வரவில்லை எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

தனது தந்தை நாட்டின் ஜனாதிபதி என்பதனால் மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் வாக்குறுதியளித்திருந்தார்.

எனினும் தற்போது வரையில் அவரால் வழங்கப்பட்ட முதல் வாக்குறுதியான குடிநீர் பிரச்சினைக்கு உட்பட இதுவரையில் தீர்வு வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நாட்களில் வெலிகந்த உட்பட பொலன்நறுவை மக்கள் கடுமையான வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE