இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்களான குமார சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இந்த சந்திப்பு முதலமைச்சரின் அலுவலத்தில் இன்று நடைபெற்றுள்ளது.
இதன் பின்னர் இவர்கள், காலி, கராப்பிட்டிய சிறுவர் புற்றுநோய் மருத்துவமனையை அமைப்பதற்கான நிதி சேகரிக்கும் நோக்கில் பருத்தித்துறை கடற்படை முகாம் எதிரில் ஆரம்பமான சமாதான பாத யாத்திரையில் கலந்து கொண்டனர்.