யாழ்பாண தீவுகளுக்கிடையேயான போக்குவரத்திற்கு கடற்படையினர் ஆதரவு ஜனாதிபதியும் அனுமதி வழங்கினார்.

217

யாழ்தீபகற்பத்தில் அமையப்பெற்றுள்ள தீவுகளுக்கிடையே பயணிகள் போக்குவரத்தினை சீரான முறையில் நடாத்தும் வேலைத்திட்டத்திற்கு இலங்கை கடற்படையினரின் முழுமையான ஆதரவினை வழங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கையெடுத்துள்ளது. பாதுகாப்பு அமைச்சரான அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிக்காட்டலிற்கமைவாக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். அதன் அடிப்படையில் யாழ்பாண தீவுகளிற்கருகாமையில் படகுதுறைகள் மற்றும் கட்டிடங்களை நிர்மாணிக்கும் பொருட்டு கடற்படையினரின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

கரையோர பயணிகள் போக்குவரத்து சேவையானது துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்றது. பயணிகள் போக்குவரத்தின் பொருட்டு பயன்படுத்தப்படுகின்ற படகுகளின் தரத்தினை பேணுதல்,  தீவுகளிற்கருகாமையில் படகுதுறைகளை நிர்மாணித்தல், மக்களின் பாதுகாப்பினை உறுதிச்செய்தல் உள்ளடங்கிய அனைத்து காரணிகளும் இச்செயற்றிட்டத்தில் உள்ளடங்கியுள்ளன.

எனவே இச்செயற்றிட்டத்தின் கீழ் யாழ் தீவகங்களிற்கிடையே சீராண பயணிகள் போக்குவரத்தினை முன்னெடுக்கும் பொருட்டு இவ்வாண்டு அரசாங்கம் ரூபாய் 50 மில்லியன்களை செலவிட்டுள்ளது. இப்பணத்தை கொண்டு நிர்மாணிக்கப்படவுள்ள படகுதுறைகள் மற்றும் கட்டிடங்களின் நிர்மாணப்பணிகளின் பொருட்டு இலங்கை கடற்படையினரின் ஒத்துழைப்பினை பெற்றுக்கொள்ளும் நோக்கில் கௌரவ துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவினால் ‘ யாழ்பாணம் மற்றும் தீவுகளிற்கிடையே பாதுகாப்பான பயணிகள் மற்றும் பொருட்கள் போக்குவரத்தினை முன்னெடுக்கும் பொருட்டு படகுதுறைகளை அபிவிருத்திச் செய்தல்’  எனும் தலைப்பின் கீழ் அமைச்சரவை பத்திரமொன்றினையும் சமர்பித்தார்.

இவ்வமைச்சரவை பத்திரத்தில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்ததாவது, படகுதுறைகள் மற்றும் கட்டிடங்களை நிர்மாணிக்கும் பணிகள் இலங்கை துறைமுக அதிகாரச் சபையின் தொழில்நுட்ப பிரிவின் ஆலோசனைகளிற்கமைவாக யாழ் மாவட்டச் செயலாளரினால் முன்னெடுப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

யாழ் தீபகற்பத்தில் அமையப்பெற்றுள்ள 11 தீவுகளுள் 7 தீவுகளில் மாத்திரமே மக்கள் வசிக்கின்றார்கள். அவை குறிக்கட்டுவான், நாகதீபம், நெடுந்தீவு, அனலைதீவு, எலுவைதீவு , புங்குடுதீவு, மற்றும் காரைநகராகும். இவற்றுள் ஒரு சில தீவுகளிற்கிடையே தரைவழி போக்குவரத்து காணப்பட்ட போதிலும் ஏனையவற்றிற்கு கடல் வழி போக்குவரத்தே இன்று வரையில் காணப்படுகின்றது.

எது எவ்வாறாயினும் பண்டைய காலம் தொட்டு பயணிகள் படகுகள் மற்றும் படகுதுறைகளில் காணப்படுகின்ற தொழில்நுட்ப கோளாருகள் காரணமாக மிகவும் ஆபத்தான முறையிலேயே பயணிகள் போக்குவரத்து முன்னெடுக்கப்பட்டது. எனவே இந்நிலையினை சீர்செய்வதே தற்போதைய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். இதன் முதற்படியாக யாழ்பாணம் சுருவில் பகுதியில் படகுகளின் தொழில்நுட்ப தரத்தினை பரிசோதிக்கும் பொருட்டு  படகு திருத்தும் நிலையத்தினை நிர்மாணிப்பதற்கும்,  வணிக கப்பற் செயலகத்தின உப அலுவலகமொன்றினை ஊர்காவற்றுறையில் திறப்பதற்கும் துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுமை அமைச்சு நடவடிக்கையெடுத்துள்ளது.

unnamed-1-copy-46-377x670 unnamed-3-copy-40-768x574

SHARE