வெட்டுப்புள்ளியின் அளவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய ஆர்ப்பாட்டம்!

209

2015ஆம் ஆண்டு கா.பொ.த உயர் தரப் பரீட்சையில் தோற்றி சித்தி பெற்ற மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொழும்பு மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள வெட்டுப்புள்ளி வறுமையான பிரதேசமாகவும், குளிர் பிரதேசமாகவும் காணும் நுவரெலியா மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளமை நுவரெலியா மாவட்ட மாணவர்களை பல்கலைகழகத்திற்கு செல்லவிடாத நிலையை உருவாக்கியுள்ளது.

இந்த வெட்டுப்புள்ளியின் அளவை கடந்த 2014ஆம் ஆண்டு வழங்கப்பட்டுள்ள அதே அளவிற்கு தற்போதும் வழங்க வேண்டும் என கோரி , நுவரெலியா நல்லாயன் மகளிர் மகா வித்தியாலய மாணவர்கள் இன்று (01)ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பெற்றோர்கள் கல்வி அமைச்சுக்கும், ஜனாதிபதி மற்றும் பிரதமர், மனித உரிமை மீறல் போன்ற இன்னும் பல திணைக்களங்களுக்கும் அழுத்தம் கொடுத்து போராட்டம் ஒன்றினை நுவரெலியா நகரின் தபால் அலுவலகத்தின் முன்னால் நடாத்தியுள்ளனர்.

இந்த போராட்டத்தில் 1000ற்கும் மேற்பட்ட பெற்றோர்கள் வாசகங்கள் எழுதிய சுலோகங்களை ஏந்திய வண்ணம் கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டமானது நல்லாயன் மகளிர் பாடசாலை வளாகத்திலிருந்து பேரணியாக நகரை வந்தடைந்துள்ளது.

இதனை தொடர்ந்து தமது கோரிக்கைகள் அடங்கிய தயாரிக்கப்பட்ட மகஜரை மாவட்ட கல்வி காரியாலயத்திற்கு சமர்பிக்கவென ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

பேரணியாக சென்றே கல்வி அதிகாரிடம் மகஜரை கையளிக்க உள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

625-0-560-320-160-600-053-800-668-160-90-1 625-0-560-320-160-600-053-800-668-160-90-2 625-0-560-320-160-600-053-800-668-160-90-3 625-0-560-320-160-600-053-800-668-160-90

SHARE