140 அடி உயரமான இடத்திலிருந்து ஒரு பெண் கயிரை கட்டி கொண்டு கீழே குதித்த போது அந்த கயிறு திடீரென அறுந்ததில் அந்த பெண் கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளார்.
தென் கொரியா நாட்டில் உள்ள ஒரு இடத்தில் 140 அடி உயரமான பாலத்தில் இருந்து கயிறுகளை பாதுகாப்பாக கட்டி கொண்டு கீழே உள்ள தண்ணீரில் குதிக்கும் ஒரு போட்டியை சிலர் குழுவாக சேர்ந்து ஏற்பாடு செய்திருந்தார்கள்.
அதில் Yoo (29) என்னும் இளம் பெண் கலந்து கொள்ள தனது பெயரை பதிவு செய்திருந்தார். அதன் படி அந்த நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு தனது காதலருடன் அவர் வந்தார். பின்னர் அவர் உடலில் பாதுகாப்பு கவசங்கள் பொருத்தப்பட்டு கயிறும் கட்டப்பட்டது.
பின்னர் அந்த உயரமான பாலத்தின் மேல் சென்று Yoo கீழே குதிக்க தயாராகி ஓடி வந்து குதித்தார். அப்போது அவர் உடலில் கட்டியிருந்த கயிரானது எதிர்பாராதவிதமாக அறுந்ததில் அவர் அங்கிருந்து கீழே விழுந்தார்.
இதையெல்லாம் வீடியோ எடுத்து கொண்டிருந்த Yooவின் காதலர் ,Yoo கீழே விழுந்தை கண்டு கத்தினார். பின்னர் அங்கிருந்தவர்கள் Yoo வை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தலையில் பலத்த காயம் அடைந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்க பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த குழுவின் தலைவரை, அலட்சியமாக பாதுகாப்பின்றி அந்த போட்டியை நடத்தியாக கூறி பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.