முஸ்லிம்களை முழுவதுமாக அழிக்க வேண்டும்,- பதறவைக்கும் தேரரின் சதி அம்பலம்! வீடியோ

275

 

தமிழீழம் அமைவதை பிரபாகரன் போன்றதொரு பைத்தியக்காரன் வந்து அழித்துவிட்டான் என ஞானசார தேரர் கருத்து வெளியிட்டுள்ளார்.

அண்மைக்காலமாக இலங்கையில் கலவரத்தை ஏற்படுத்த திட்டம் தீட்டிவரும் அவர் இன்று இரகசியமாக கூட்டம் ஒன்றினை கொழும்பில் ஏற்பாடு செய்துள்ளார். குறித்த கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கும் போது,

நாட்டில் தற்போது திருடர்களே அதிகமாக இருக்கின்றார்கள், தற்போது புற்றுநோய் நோய் போன்று இலங்கை மாறிவிட்டது அனைத்து இடங்களிலும் கொள்ளைகாரர்களே இருந்து வருகின்றார்கள்.

அப்துல் ராசிக் என்பவரை கைது செய்தால் நாம் சந்தோசப்படக்கூடாது, இப்போதே அவர்களைப் போன்றவர்கள் வெளியே வந்துள்ளார்கள். முஸ்லிம்களை முழுவதுமாக அழிக்க வேண்டும், அதற்காக அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும்.

இலங்கையில் விடுதலைப்புலிகள் எப்படி வந்தார்கள் என அனைவருக்கும் தெரிந்திருக்கும். புலிகள் 1981ஆம் ஆண்டுகளிளோ அல்லது 1983ஆம் ஆண்டோ உருவாக வில்லை 1920 முதலாகவோ ஆரம்பித்து விட்டார்கள்.

வெள்ளையர்கள் இலங்கையை ஆட்சி செய்து கொண்டிருக்கும்போதே செல்வநாயகம் மற்றும் பொன்னம்பலம் போன்றோர்கள் மூலமாக தனி யாழ்ப்பாண போராட்டம் தொடங்கிவிட்டது.

அவர்கள் தனி நாட்டை அழிக்க திட்டமிட்டார்கள், ஆனால் அவர்களுடைய திட்டத்தை பிரபாகரன் போன்று ஒரு பைத்தியக்காரன் வந்து குழப்பிவிட்டார் அதன் காரணமாகவே தனி ஈழம் அமைக்க முடியாமல் போனது.

“பிரபாகரன் வந்து நீங்கள் பொறுமையாக இருந்தால் சரிப்பட்டு வராது ஆயுதம் ஏந்த வேண்டும்” என கூறியதாலேயே தமிழீழ கனவு கரைந்து போனது, அந்த நிலையே தற்போது முஸ்லிம்களுக்கும் ஏற்படப்போகின்றது.

நாட்டில் சிங்களத்தை காக்க அனைவரும் ஒன்று திரள வேண்டும், அரசு பொறுமையாக இருக்கின்றார்கள் பிரபாகரன் போன்று கிளைமோர் குண்டு போட்டால் தான் தெரியவரும்.

பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தாவிடின் புரியவைக்க முடியாது, நாட்டில் முறைகேடான தலைமைகளினால் இவ்வாறு நடைபெற்று வருகின்றது. டானை கைது செய்து விட்டார்கள் அவரை காப்பாற்ற வேண்டும்.

இந்த நிலையில் நாம் செய்யவேண்டியது நாடு முழுவதும் அழிக்கப்பட்டுவரும் பௌத்தத்தை காக்க நாம் சிங்களவர்கள் அனைவரும் இலங்கையில் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என ஞானசார தேரர் நாட்டையே பற்றவைக்கும் அளவிற்கு பாரதூரமான வகையில் கருத்துகளை தெரிவித்துள்ளார்.

குறிப்பாக பிக்குகளும் இளைஞர்களும் ஒன்றிணைந்து இடம்பெற்ற இந்த கலந்துரையாடல் முகப்புத்தகம் ஊடாக நேரலையாக பகிரவும் பட்டுள்ளது, என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த கூட்டம் இனவாதத்தினை தூண்டும் உச்சகட்ட செயலாக அமைந்துள்ளது, எனவும் அவர் அங்கு தெரிவித்துள்ள கருத்துகளால் இலங்கையில் பாரிய அளவு பதற்றம் ஏற்படக் கூடும் எனவும் தென்னிலங்கை தரப்பு அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஊடகங்கள் இதற்கு அனுமதிக்கப்பட வில்லை எனவும் கூறப்படுகின்றது. எவ்வாறாயினும் அரசு இவ்வாறான செயல்களை உடனடியாக கவனித்து இனவாதிகளை தண்டிக்காவிடின் நாடு அதி பயங்கர நிலையை சந்திக்கும் என தென்னிலங்கை புத்திஜுவிகள் தெரிவித்துள்ளனர்.

 

SHARE