வெற்றியை கொண்டாடும் தருணத்தில் விராட் கோஹ்லிக்கு வந்த சோதனை

306
625-500-560-350-160-300-053-800-748-160-70-15

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் அணித்தலைவர் விராட்கோஹ்லி பந்தில் சுவிங்கத்தை தடவியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிகெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது.

இந்நிலையில், முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆன நிலையில் இரண்டாவது டெஸ் போட்டியில் அபாரமாக 246 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதைப் போலவே, ஆஸ்திரேலியா சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் இரண்டு டெஸ்டின் முடிவில், தென் ஆப்ரிக்க அணி வென்றது.

இந்நிலையில், ஹோபர்ட்டில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளில் தென் ஆப்ரிக்க கேப்டன் டுபிளசி, பந்தில் செயற்கையான திரவத்தை தடவியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனை விசாரணை செய்த ஐ.சி.சி பந்தில் திரவத்தை தடவிய குற்ரத்திற்காக டுபிளசி போட்டி சம்பளத்தில் இருந்து 100 சதவீதம் அபராதமாக அறிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக ராஜ்கோட்டில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி பந்து வீசும் பொழுது தான் வாயில் வைத்திருந்த சுவிங்கத்தை வைத்து பந்தை பளபளக்க செய்தது குற்றம் என தென் ஆப்ரிக்க பத்திரிக்கை நிறுவனம் ஒன்று வீடியோவாக வெளியிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தற்போது, ஐ.சி.சி.,யின் பார்வை இந்திய அணித் தலைவர் கோஹ்லி பக்கம் திரும்பியுள்ளது.

SHARE