அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி கொழும்பில் ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் கொள்ளுப்பிட்டி பகுதியிலிருந்து ஜனாதிபதி செயலகம் வரையில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளளது.
அரசியல் கைதிகளின் விடுதலைக்கான ஒன்றியத்தின் தலைவர் சக்திவேல் பாதர் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பல ஆண்டுகளாக சிறைச்சாலையில் தடுத்து வைத்துள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்ப்பட்டுள்ள நிலையில், சாரதிகளை மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.