முன்னாள் இராணுவத் தளபதியாக இருந்து பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் பலிவாங்கியதாக கூறப்பட்டதை அடுத்து அரசியலில் பிரவேசித்த அமைச்சர் சரத் பொன்சேகா இப்போது புதிய பரிமானம் எடுத்துள்ளார்.
இத்தனை காலமும் இறுகிய மனம் படைத்தவராக வர்ணிக்கப்பட்ட பொன்சேகா நேற்றைய தினம் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பாடல்களை பாடி அசத்தியுள்ளார்.
இதன் காரணமாக ஒரு சிலர் வைராக்கியம் உடைய சரத் பொன்சேகாவின் உள்ளத்திலும் தெரியாத மறுபக்கங்கள் இருக்கின்றது என விமர்சிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை சரத் பொன்சேகா மீது போர்க்குற்றங்கள் இருப்பதாகவும் கூறப்படுகின்றமை சுட்டிக்காட்டப்படத்தக்கது.