நடுக்கடலில் உயிருக்கு போராடிய மீனவர்கள். காப்பாற்றிய மனிதநேயம் மிக்க பெண்

293

இந்திய கடற்படையைச் சேர்ந்த கேப்டன் ராதிகா மேனனுக்கு ஐ.நா.வின் சர்வதேச கடல்சார் அமைப்பு வீர தீர விருது வழங்கி கௌரவித்துள்ள சம்பவம் நெகிழ வைத்துள்ளது.

வீர தீர விருதை முதல் முறையாக பெறும் இந்திய கடற்படையைச் சேர்ந்த கேப்டன் ராதிகா மேனன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்து விருது அவருக்கு கிடைக்க முக்கிய காரணம் இது தான், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 22ம் திகதி ஒடிசா மாநிலம் கோபால்பூர் அருகே உள்ள வங்கக்கடலில் கடும் மழை மற்றும் பலத்தக் காற்றில் என்ஜின் பழுதடைந்தது ஒரு மீன்பிடி படகு சிக்கிக்கொண்டது.

ஒருகட்டத்தில் படகு கவிழ்ந்து மீனவர்கள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர் அப்போது, 2.5 கீ.மி தொலைவில் ராதிகா மேனன் தலைமையிலான கப்பல் இருந்துள்ளது.

பலத்தக் காற்று ராட்சத அலைகள் மோசமான சூழ்நிலை என்று பார்க்காமல் ராதிகா படகு இருக்கும் இடத்துக்கு கப்பலை இயக்கி மீட்பு நடவடிக்கையில் ஈடுபட உத்தரவிட்டுள்ளார்.

பின்னர், தன் உயிரைப் பணயம் வைத்து நடுக்கடலில் உயிருக் போராடி கொண்டிருந்த 7 மீனவர்களை பத்திரமாக மீட்டுள்ளார்.

இந்த மனிதநேயம் மிக்க சாகசத்துக்காக, ஐ.நா.வின் சர்வதேச கடல்சார் அமைப்பு ராதிகா மேனனுக்கு வீர தீர விருது வழங்கி கௌரவித்துள்ளது.ship

SHARE