நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறும், 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான குழு நிலை விவாதத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துக் கொண்டுள்ளார்.
சுற்றாடல் அமைச்சின் செலவீனங்கள் குறித்து விவாதிப்பதற்காகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருகை தந்துள்ளார்.
இதேவேளை, மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி இன்றைய தினம் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.
மேலும், மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர் உள்ளிட்ட அமைச்சரவையின் பிரதானி, பாதுகாப்பு அமைச்சர், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்றத்தில் ஒதுக்கீட்டுச்சட்டமூலம் 2017 வரவுசெலவுத்திட்ட குழுநிலை நிகழ்ச்சி நிரலில் இன்று 12.30 மணிமுதல் 1 மணிவரை மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ஜனாதிபதி விவாதிக்க உள்ளார்.