மாவீரர்களை நினைவு கூறுவதற்காக தமிழர்களுக்கு அழைப்பு

295

 

இம்முறை மாவீரர் தினத்தினை துயிலும் இல்லத்தில் நினைவேற்றுவதற்கு ஜனநாயக போராளிகள் கட்சி ஏற்பாடுகளை செய்துள்ளதாக அக்கட்சியின் ஊடகப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

thulasi-press-250715-seithy

தமிழர் சகவாழ்விற்கும், இன மானம் காத்திடவும் தமது இன்னுயிரை அர்ப்பணித்தவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு தமிழர் தாயக பிரதேசம் எங்கும் அனுஷ்டிக்க ஜனநாயக போராளிகள் கட்சி ஏற்பாடு செய்துள்ளது.

இதேவேளை நாளை (25) முதல் எதிர்வரும் 27 ஆம்திகதி வரை நினைவேந்தல் காலப்பகுதியாக அனுஷ்டிக்கப்படும்.

இக்காலப்பகுதியில் உறவுகள் கேளிக்கை மற்றும் களியாட்ட நிகழ்வுகளை தவிர்த்து, இனத்தை நேசித்து தமது மாவீரர்களுக்கு நினைவினை சுமந்து அனுஷ்டிக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இறுதிநாள் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை மாலை கிளிநொச்சி பகுதியில் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

அன்றைய தினம் தாயக உறவுகள் அனைவரும் மலர்தூவி சுடரேற்றி எம் உறவுகளை நினைவில் கொள்ள அனைவரையும் நினைவேந்தல் நிகழ்வில் உணர்வு பூர்வமாக கலந்துகொள்ளுமாறும் ஜனநாயக பேராளிகள் கட்சியின் ஊடகப்பிரிவினர் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE