முல்லைக்கடல் பரப்பில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய வைத்திய கலாநிதி சிவமோகன் அணி திரண்ட மக்கள் வெள்ளம்
தமிழ் மக்களின் விடுதலைக்காய் உயிர்நீத்த மாவீரர்களின் நினைவாக இன்று உலகெங்கிலும் தமிழ் மக்களால் உணர்வுபூர்வமாக மாவீரர்நாள் அனுஷ்ட்டிக்கப்பட்டது.
இதில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற வைத்திய கலாநிதி சிவமோகன் மாவீரர்களுக்கான பிரதான சுடரினை ஏற்றிவைத்து அகவணக்கம் செலுத்தினார்.அத்தோடு கடலில் காவியமான மாவீரர்களுக்கு கடலிலும் சுடர் ஏற்றப்பட்டது.
இந்த நிகழ்வில் பெருமளவிலான மக்கள் உணர்வெளிச்சியுடன் கலந்து கொண்டனர்.