லண்டன் மாநகரில் களைகட்டிய நவம்பர் 27 மாவீரர் தினம் 30000 மேல் மக்கள் வெள்ளம் நேரடி காணொளி
தமிழ் மக்களது விடுதலைக்காக தம் உயிரை தியாகம் செய்த வீரர்களை நினைவுகூரும் ‘மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள்’ உலக வாழ் தமிழர்களால் இன்றைய தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்த வகையில், மாவீரர் தினத்தை முன்னிட்டு பிரித்தானியா வாழ் தமிழர்கள் கொண்டாட்டங்களில் ஈடுப்பட்டுள்ளனர்.
உலகத் தமிழர் வரலாற்று மையம் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில் இந்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
லண்டனில் உள்ள ராணி எலிசபத்பூங்காவில் இந்த மாவீரர் தின கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு தற்போது வரலாற்று பெயர் எழுச்சியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் கூறினார்.
குறித்த தலைமை செயலக நெறிப்படுத்தலில் பிரித்தானியா வாழ் தமிழர்களால் நினைவுகூரப்பட்டுள்ளது.
மேலும், தாயகத்தின் முல்லைத்தீவு பூங்கா மாவீரர் துயிலுமில்லத்தை நினைவுப்படுத்தும் வகையில் இங்கு அமைக்கப்பட்டுள்ள மாவீரர் கல்லறைகள் சான்றாக உள்ளது.