ஈழமண்ணின் தேசியத்தலைவரின் வழிகாட்டலில் வன்னியில் பாராளுமன்ற உறுப்பினர் MP சிறிதரன்னுடன் அணிதிரண்டு மாவீரர்களுக்கு அஞ்சலி

289

இதுவே உணர்வுடன் நடைபெறுகிறது. ஈழமண்ணின்  மாவீரர் நாள்

பல்லாயிரக் கணக்கானவர்களின் கண்ணீரில் நனைந்தது கிளிநொச்சி கனகபுரம் துயிலும் இல்லம்

விடுதலைப் புலிகளின் ஆயுதம் மௌனிக்கப்பட்ட பின்னர் பல்வேறு பட்ட எதிர்ப்புகளுக்கு பின்னர் முதல் தடவையாக கிளிநொச்சி கனகபுரம் துயிலுமில்லத்தில் பல்லாயிரங்கணக்கான பொதுமக்கள் ஒன்று திரண்டுள்ளனர்.

அந்தவகையில் கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லத்தில் இலங்கை நேரம் 6 மணிக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஞா. சிறீதரன் ஏற்றி ஆரம்பித்து வைக்க அவரைத் தொடர்ந்து அருட்தந்தையர்கள் தீபம் ஏற்றி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து பல்லாயிரங்கணக்கான பொதுமக்கள் அணிதிரண்டு மெழுகு வர்த்திகளை ஏற்றிவைத்து தமது அஞ்சலிகளை செலுத்தினார்கள்.புலிகளின் போர் மௌனிக்கப்பட்டதன் பின்னர், மாவீரர் நாளான கார்த்திகை 27 விதையாகியவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவது என்னமோ அச்சுருத்தல் மிக்க நிகழ்வாகவே எதிர்நோக்கப்படுகின்றது.

யுத்தம் முடிவுக்கு கொண்டு வந்த பின்னர் பலவிதமான அச்சுருத்தல்களையும் எதிர்ப்புகளையும் தாண்டி பல்லாயிரம் கணக்கில் பொதுமக்கள் கிளிநொச்சியில் ஒன்று திரண்டு மாவீரர் தினத்தை அனுஷ்டித்தது இதுவே முதல் தடவையாகும் என்பது சுட்டிக்காட்டப்படத்தக்கது.

625-0-560-320-160-600-053-800-668-160-90 15178132_667076820119752_2080805832914436534_n 15181476_667076876786413_42321173786464947_n 15192542_667076730119761_7151150133464357230_n 15192639_667077136786387_8381121827793419753_n 15193535_667076980119736_5464106584815867736_n 15193597_667076886786412_494872898247975521_n 15202550_667077173453050_445232201564049275_n 15202586_667076956786405_6802452428357528550_n 15203156_667077103453057_2808162483481954340_n 15241163_667076733453094_8580008929508831830_n 15241932_667077080119726_8140487565366145247_n 15241989_667076736786427_4581760017795590055_n 15267607_667076823453085_2501039690725202505_n

SHARE