வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பழையவாடி கிராமத்தில் கடமைநேரத்தில் பணியாற்றிய அபிவிருத்தி உத்தியோகத்தர் மீது தாக்குதல் சம்பவம்ஒன்று இடம்பெற்றுள்ளது.
இது பற்றி மேலும் தெரிய வருவதாவது,
கடந்த வெள்ளிக்கிழமை புளியங்குளம் தெற்கு கிராம அலுவலர் பிரிவில்கடைமையாற்றும் வவுனியா வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள விஜயத்திற்காக புளியங்குளம் தெற்கு பழையவாடி கிராமத்திற்கு சென்ற போதுகிராமவாசி ஒருவரால் தாக்கபட்டுள்ளார்.
குறித்த அவிவிருத்தி உத்தியோகத்தர் வீட்டுத்திட்ட கட்டுமான முன்னேற்றம்தொடர்பாக பார்வையிடுவதற்காக பழையவாடி கிராமத்திற்கு சென்று திட்டம் நடைபெறும்ஒரு வீட்டில் ஒளிப்படம் எடுத்துக்கொண்டு நின்ற போது அயல் வீடு ஒன்றில் இருந்துவருகை தந்த நபர் ஒருவர் தகாத வார்த்தைகளால் பேசியவாறு குறித்த அலுவலரை சரமாரியாகதாக்கியுள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற வீட்டு உரிமையாளர் இதை தடுக்காது வேடிக்கைபார்த்துக்கொண்டு நின்றுள்ளார்.
தாக்குதல் சம்பவம் தொடர்பாக பிரதேசசெயலாளருக்கும் உதவித்திட்டமிடல் பணிப்பாளருக்கும் தெரியப்படுத்தப்பட்டதுடன்,சனிக்கிழமை புளியங்குளம் காவல்நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, தாக்குதல் நடத்திய சந்தேகநபர் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டு ஞாயிறு காலைவிடுவிக்கப்பட்டதாக அறிய முடிகிறது.