நாடாளுமன்றத்தில் மோதிக் கொண்ட சஜித் – நாமல்!

256

athavan-card-copy-5-copy-copy3-copy

நாடாளுமன்றில் அமைச்சர் சஜித் பிரேமதாஸ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் வாய்தர்க்கத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

வரவு செலவுத்திட்டத்தின் வீடமைப்பு அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தின் போது இந்த தர்க்கம் ஏற்பட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

குறித்த விவாதம் இடம்பெற்ற தினத்தன்று முழு நாளும் அமைச்சர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்திலேயே இருந்தார். அன்றைய தினம் அமைச்சின் உயர் அதிகாரிகள் அனைவரும் நாடாமன்றத்தில் இருக்க வேண்டியது கட்டாயமாகும்.

“நாடாளுமன்ற விவாதத்தில் எதிர்கட்சியினர் விமர்சிக்க கூடும். விமர்சிக்கப்படும் விமர்சனங்கள் குறித்து அவதானமாக இருக்க வேண்டும். அவற்றினை பதிவு செய்துக் கொள்ளுங்கள். நியாயமாக விமர்சனங்கள் காணப்பட்டால் அவை தொடர்பில் அவசியமான நடவடிக்கை மேற்கொள்ளுங்கள்… ” என அமைச்சர் சஜித் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதேவேளை விவாதத்திற்கு முன்னர் அமைச்சு மற்றும் ஏனைய நிறுவனங்களின் அதிகாரிகளை அழைத்து அனைத்து நிறுவனங்களின் முன்னேற்றம் தொடர்பில் ஆராய்ந்துள்ளார். சிக்கல் உள்ள நிறுவனங்கள் தொடர்பில் அவர் அவதானம் செலுத்தியிருந்தார்.

இதேவேளை சஜினின் ஹம்பாந்தோட்டை காணி தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச விமர்சனம் செய்துள்ளார்.

“ஹம்பாந்தோட்டை ரேஸ் கோஸ் நிர்மாணிப்பதற்காக ஒதுக்கப்பட்ட கிட்டத்தட்ட 100 ஏக்கர் காணியில் நான் அமரதேவ பெயரில் கிராமம் ஒன்றை அமைக்க ஒதுக்கினேன். அதற்கென்றால் கோவித்துக் கொள்ள வேண்டாம்”… என சஜித், நாமலை பார்த்து கூறியுள்ளார்.

“உயரம் – குட்டை தோற்றம், வெள்ளையா கருப்பா என பார்த்து அல்லவா தொழில்வாய்ப்புகளை வழங்குகின்றீர்கள்”… என நாமல், சஜித்திற்கு வாய்மூல தாக்குதல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

“என்ன குறைப்பாடுகள் இருந்தாலும், நான் ஓய்வு விடுதிகளுக்கு கொண்டு சென்று பதவி வழங்குவதில்லை. அவ்வாறு அழைத்து செல்லப்பட்டு பதவி வழங்கிய முறை குறித்து ஹம்பாந்தோட்டையில் அனைவரும் அறிந்துள்ளனர்.

அதேபோன்று மாளிகை, நிலத்தடி வீடுகளுக்கு அழைத்து சென்றும் தொழில் வாய்ப்புகளை வழங்கவில்லை”.. என நாமலுக்கு சஜித் பதிலடி வழங்கியுள்ளார்.

SHARE