ஜெயலலிதாவின் சமாதிக்கு முன்பு முடிந்த திருமணம்

268

சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சமாதிக்கு முன்பு கொளத்தூரைச் சேர்ந்த ஒரு ஜோடி திருமணம் செய்து கொண்டுள்ளது.

கடந்த 5ஆம் திகதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலமானார் . அவரது உடல் சென்னை மெரினாவில் உள்ள எம்ஜிஆர் சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை கொளத்தூரைச் சேர்ந்த பிரான்சிஸ்- ரெஜூலா ப்ரீத்தி ஜோடிக்கு வரும் பெப்வரி 1ஆம் திகதி திருமணம் நடக்க இருந்தது.

இந்த திருமணத்தில் கலந்து கொள்வதாக ஜெயலலிதா தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாம். இதனிடையே, ஜெயலலிதா மரணம் அடைந்தார்.

இந்த நிலையில், இன்று மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு பிரான்சிஸ் ரெஜூலா ப்ரீத்தி ஜோடி உறவினர்களும் வந்து திருமணத்தை நடத்தியுள்ளனர்.

சமாதி முன்பு இருவரும் மாலை மாற்றிக் கொண்டு திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு உறவினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இதேவேளை, இங்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கானவர்கள் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

625-0-560-350-160-300-053-800-668-160-90-1 625-0-560-350-160-300-053-800-668-160-90

SHARE