நடிகர் மாதவன் சமூக வலைதளங்களில் அவ்வப்போது சில விஷயங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வருபவர்.
சமீபத்தில் வந்த வர்தா புயல் சென்னையை சூறையாடியது. இதில் பல மரங்கள் வேரோடு சாய்ந்தன.
இரண்டு நாட்களுக்கு பின் சென்னை தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியது. இதனால் சினிமா படபிடிப்புகளும், படக்காட்சிகளும் ரத்து செய்யபட்டன.
ஏற்கனவே நடிகர் மாதவன் புயலால் ஒரு பேருந்து கவிழ்ந்ததை வீடியோவாக எடுத்து வெளியிட்டார்.
இப்போது அவர் நடிக்கும் விக்ரம் வேதா படத்தின் 3 ஆவது நாள் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.
துறைமுகம் ஒட்டியுள்ள சரக்கு குடோன் பகுதியில் நடைபெறுகிறது.
புயலால் அங்கு மழைநீர் தேங்கியுள்ளது இதனால் ஷூட்டிங் எடுக்க சில சிரமம் ஏற்பட்டிருப்பதை வீடியோ மூலம் சுட்டிக் காட்டினார்.