மாவட்டத்தில் சவேரியான் ஜேசுராஜன் லோகு’ வெற்றி

263

மன்னார் மாவட்டத்தின் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராக முசலி பிரதேச செயலாளர் பிரிவில் போட்டியிட்ட முத்தரிப்புத்துறை கிராமத்தைச் சேர்ந்த சவேரியான் ஜேசுராஜன் லோகு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாகாண பணிப்பாளர் என்.எம்.முனவ்பர் இதனை தெரிவித்துள்ளார். தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 4வது பாராளுமன்ற தேர்தல் இன்று இடம்பெற்றது.

இந்நிலையில் மன்னார் மாவட்டத்தில் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை தெரிவு செய்வதற்காக 17 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர்.

மன்னார் மாவட்டத்தில் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் 04 வேட்பாளர்களும், நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 4 வேட்பாளர்களும், முசலி பிரதேச செயலாளர் பிரிவில் 4 வேட்பாளர்களும், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 2 வேட்பாளர்களும், மடு பிரதேச செயலாளர் பிரிவில் 3 வேட்பாளர்களும் போட்டியிட்டனர்.

மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்ட 17 வேட்பாளர்களில் இருவர் பெண்களாவர். மன்னார் மாவட்டத்தில் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை தெரிவு செய்வதற்கு 7 ஆயிரத்து 87 இளைஞர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.

இந்த நிலையில் வாக்களிப்புக்கள் நிறைவடைந்த நிலையில், பிரதேச செயலகங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

அதற்கமைவாக அதி கூடிய வாக்குகளாக 582 வாக்குகளைப் பெற்ற முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் போட்டியிட்ட முத்தரிப்புத்துறை கிராமத்தைச் சேர்ந்த ‘சவேரியான் ஜேசுராஜன் லோகு’ மன்னார் மாவட்டத்தின் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

625-0-560-320-160-600-053-800-668-160-90-1 625-0-560-320-160-600-053-800-668-160-90-2 625-0-560-320-160-600-053-800-668-160-90

 

SHARE