இத்தாலியில் 39000 ஆண்டுகளுக்கு பின்னர் ஏற்படபோகும் பேரழிவு…! நடக்க போவது என்ன…?

246

இத்தாலியின் நப்லி நகரத்தை அண்மித்த பகுதியில் நீண்ட காலமாக உறங்கும் நிலையில் இருந்த கேம்பி பிளக்கெரி எரிமலை தற்போது வெடிக்கும் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலி நாட்டில் எரிமலை ஆய்வாளர்கள் இதனை தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டு சர்வதேச ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன.

இந்த எரிமலை வெடிக்குமாக இருந்தால் புவியியல் ரீதியில் பாரிய பேரழிவு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் எரிமலையின் மக்மா தீக்குழம்பு திரவ வெளியீட்டு நிலையை கண்டுப்பிடித்துள்ள முதல் சந்தர்ப்பம் இதுவெனவும் கூறப்பட்டுள்ளது.

கடந்த 39000 ஆண்டுகளுக்கு முன்னர் குறித்த எரிமலை வெடித்தபோது சுமார் 100 கிலோ மீட்டர் தூரம் வரையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது 200000 ஆண்டுகளில் ஐரோப்பாவில் இடம்பெற்ற மிகவும் பாரிய எரிமலை வெடிப்பு எனவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலையில், தற்போது குறித்த எரிமலை வெடிக்குமாக இருந்தால் சுமார் 5 லட்சம் பேர் வரையில் பாதிக்கப்படுவார்கள் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2005ஆம் ஆண்டு வரையில் உறங்கும் நிலையில் இருந்த குறித்த எரிமலையானது 2012ஆம் ஆண்டு மீண்டும் உயிர்ப்பு பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

 

SHARE