இந்தியாவின் கொல்கொத்தாவிலுள்ள அன்னை தெரேஸாவின் சமாதியை, ஐஎஸ் தீவிரவாதிகள் இலக்கு வைத்திருப்பாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பங்களாதேஷ் டாக்கா நகரில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலின் பின்னர் கடந்த ஜுலை மாதத்தில் இந்தியாவில் மொஹமட் முசா என்ற சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இவரே இந்தத் தாக்குதல் திட்டத்தை மேற்கொள்ள திட்டமிட்டதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
ரஷ்யா மற்றும் அமெரிக்காவை சேர்ந்தவர்களும் பிரித்தானியாவை சேர்ந்தவர்களும் குறிப்பிட்ட இந்தப் பகுதிக்கு வருகின்றார்கள். இவர்களை இலக்கு வைத்து இந்த தாக்குதலுக்கு திட்டமிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ரஷ்யா ஐஎஸ் தீவிரவாதிகளை எதிரிகளாக கருதி செயற்பட்டு வருகின்றனர். இதனாலேயே அந்நாட்டு மக்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளவதற்கு திட்டமிடப்பட்டதாக ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.