இவர்களை தெரியுமா…..? உடன் தெரியப்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை…!

231

கொலை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரை கைது செய்வதற்கு பொலிஸார் பொது மக்களின் உதவியை கோரியுள்ளனர்.

கடந்த ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி வெயங்கொட பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே குறித்த இருவரும் தேடப்பட்டு வருகின்றனர்.

பெண் ஒருவர் உள்ளிட்ட இரண்டு சந்தேகநபர்களே இவ்வாறு தேடப்படுவதாகவும், குறித்த பெண் சந்தேகநபருடன் இரசிய தொடர்பை பேணிவந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இவர்கள் குறித்த தகவல் தெரிந்தால் வெயங்கொடை பொலிஸ் நிலையத்தின் 033 2287222 / 033 2287223 என்ற இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸ் தலைமையகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும், 071 8591624 என்ற இலக்கத்திற்கு அழைத்து வெயங்கொடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அறிவிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

SHARE