
சரத்குமார் நீண்ட இடைவேளைக்கு பிறகு சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டார். தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் அடங்காதே படத்தில் முக்கியமான ரோலில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பிரபல சீரியல் நடிகை திவ்யா நடிக்கின்றார், இதில் சரத்குமாரின் மனைவியாக இவர் நடித்துக்கொண்டு இருக்கின்றார்.
மேலும், இந்த படம் குறித்து இவர் கூறுகையில் ‘முதல் படமே சரத்குமார் போன்ற முன்னணி நடிகருடன் நடிப்பது சந்தோஷமாக உள்ளது.
இதுமட்டுமின்றி மேலும் ஒரு சில படங்களில் கமிட் ஆகியுள்ளேன்’ என சந்தோஷமாக கூறியுள்ளார்.