கடற்படை வீரர்கள் இருவர், அமெரிக்காவில் சமையல்காரர்களாக பயன்படுத்தப்பட்டனர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியின் போது இரண்டு கடற்படை வீரர்களுக்கு இராஜதந்திர கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டு அமெரிக்காவில் பணியாற்ற சந்தர்ப்பம் வழங்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
கலிபோர்னியாவில் உள்ள பசில் ராஜபக்சவின் மகனது வீட்டில் இவர்கள் சமையல்காரர்களாக...
போதையற்ற குடும்பம் உருவாக வேண்டும் ஜனாதிபதி வேண்டுகோள்
போதைபொருள் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தல் தொடர்பாக பொலிஸார் தினமும் தனியாக பல மணித்தியாலங்களை ஒதுக்கி நேரடிப் பங்களிப்பை வழங்க வேண்டுமென தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,போதையிலிருந்து மீட்டு சுதந்திரமான நாட்டை உருவாக்கி போதையற்ற...
இலங்கைக்கு ஏன் வந்தார் போர்க்குற்ற விவகார நிபுணர்?
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தின் சிறப்பு ஒருங்கிணைப்பாளர், ரொட் புச்வால்ட் மற்றும், தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான பிரதி உதவிச் செயலர் மன்பிரீத் ஆனந்த் ஆகியோர் சிறிலங்காவுக்கு மேற்கொண்ட...
இலங்கை இராணுவத்தின் கறுப்புப் பூனைப்படையணி நீக்கப்பட்டுவிட்டது!
முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பை விலக்கிக்கொள்ள பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ள விவகாரம் அவையில் நேற்று சூடுபிடித்திருந்தது.
நாடாளுமன்றம், சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று பிற்பகல் 1...
மகிந்தவின் பாதுகாப்பு 50ஆல் குறைக்கப் பட்டது
தமக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பு முற்றிலுமாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அளுத்கம விகாரையில் நேற்று வழிபாடுகளை முடித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு...
இலங்கையில் 51 பேருக்கு மரண தண்டனை!
கடந்தாண்டில் மாத்திரம் இலங்கையில் குறைந்தது 51 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக, சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. மரண தண்டனை தொடர்பான அதன் வருடாந்த அறிக்கையிலேயே இந்த விடயத்தை, அச்சபை தெரிவித்துள்ளது.
குறித்த அறிக்கையின்...
மீள்எழுச்சி பெற்றது வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கம்.
கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் வவுனியா மாவட்ட சங்கத்துக்கு (FSHKFDR - Vavuniya District) புதிய நிர்வாகக்குழு தெரிவுகள் இடம்பெற்று மீளக்கட்டமைக்கப்பட்டுள்ளது.
வவுனியா நகரசபை உள்ளக மண்டபத்தில் இன்று (06.04.2016) காலை 11.00 மணிக்கு...
வடமாகாண உறுப்பினர்களின் வேண்டுகோளை நிராகரித்த அமைச்சர் மஹிந்த அமரவீர
வடமாகாணத்தின் நாயாறு மற்றும் கொக்கிளாய் ஆகிய கிராமங்களில் உள்ள சிங்கள மீனவக் குடும்பங்களை அகற்றுமாறு வடமாகாண உறுப்பினர்கள் கடற்றொழில் அமைச்சரிடம் விடுத்த வேண்டுகோளை அமைச்சர் நிராகரித்துள்ளார்.
கடந்த வாரம் கடற்றொழில் அமைச்சர் மற்றும் அவரது...
எதிர்க் கட்சி தலைவர் மட்டக்களப்பிற்கு விஜயம்: பல தொழிற்சாலைகள் திறந்துவைப்பு
எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமாகிய இரா.சம்பந்தன் எதிர்வரும் சனிக்கிழமை மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ளார்.
கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் அவர்களின் அழைப்பின்பேரில் எதிர் கட்சித் தலைவரின் விஜயத்தின்போது மண்டூரில் புனரமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த...
சீனாவை சென்றடைந்தார் ரணில்! விமான நிலையத்தில் வரவேற்பு
பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீனாவை சென்றடைந்துள்ளதாக பிரதமர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் நேற்று சீனாவிற்கு புறப்பட்டுச் சென்றிருந்தார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கை சென்றடைந்துள்ளதாகத்...