பிராந்திய செய்திகள்

தந்தையை கொலை செய்து புதைத்த மகன் கைது

தனது தந்தையை கொலை செய்து புதைத்ததாக கூறப்படும் மகன் ஒருவர் கலவான, தேல்கோட பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரின் சகோதரரால் கலவான பொலிஸாரிடம் வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய அவரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்...

குப்பிளானில் வெடி பொருட்கள் மீட்பு!

யாழ்.குப்பிளானில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். யாழ்.குப்பிளான் தெற்கு கிராமத்தில் தோட்டக்காணி ஒன்றிலிருந்து இரு வாகன எதிர்ப்பு கண்ணிவெடிகள் மற்றும் சில சாதாரண கண்ணிவெடிகளுமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. இப் பகுதியில் தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்த...

யானையின் தாக்குலுக்கு இலக்காகி ஆசிரியர் மற்றும் பாகன் பலி

இருவேறு பிரதேசங்களில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி இருவர் உயிரிழந்துள்ளனர். 30 வயது ஆசிரியர் பலி கருவாக்கல் பகுதியைச் சேர்ந்த முப்பது வயதான கலந்தர்லெப்பை முஹம்மத்தம்பி முஹம்மத் இர்பான் என்ற ஆசிரியர் ஒருவர், யானையின் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். அம்பாறை,...

முல்லை குமிழமுனை பகுதியில் முறையற்ற குடியேற்றம்: சாள்ஸ் நிமலநாதன் எம்பி நேரில் சென்று பார்வை

முல்லைத்தீவு காரைத்துறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட குமிழமுனையில் வனவள திணைக்களத்திற்கு சொந்தமான பகுதியில் முறையற்ற வகையில் 1000 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளை அமைச்சர் ஒருவரின் நியாயமற்ற செயற்பாட்டால் கையகப்படுத்த முஸ்லிம்கள் முயல்வதாக மக்கள்...

ருஹுணை பல்கலைக்கழக மாணவர்கள் சத்தியாக்கிரகம்

ருஹுணை பல்கலைக்கழகத்தின் சுகாதார கற்கைகளுக்கான மாணவர்கள் தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை நேற்றுமுதல் சத்தியாக்கிரகத்தில் குதித்துள்ளனர். மாணவர்களின் பரீட்சைக்கான உரிமையை உறுதி செய்யுமாறும், பரீட்சைகளின் ஊடாக மாணவர்களை பழிவாங்கும் நிர்வாகத்தின் போக்கை கைவிட கோரியும்...

பூமிக்குள் புதையுண்டு போன கிணறு! தம்புள்ளையில் நம்ப முடியாத ஆச்சரியம்!

தம்புள்ளைப் பிரதேசத்தில் பயன்பாட்டில் இருந்த கிணறு ஒன்று திடீரென்று பூமிக்குள் புதையுண்டு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தம்புள்ளையை அண்மித்த நாவுல, பிபில பிரதேசத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. அண்மைக்காலமாக பெய்து வரும்...

கொழும்பின் புறநகர் பகுதிகளில் கடத்தப்பட்ட 11பேரும் திருகோணமலை கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்படனர்

கொழும்பின் புறநகர் பகுதிகளில் 2008-2009ம் ஆண்டு பகுதிகளில் இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்ட 11பேரும் திருகோணமலை கடற்படைமுகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றிற்கு இன்று தெரிவித்துள்ளனர். இன்று இது தொடர்பான வழக்குவிசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை...

யாழை தளமாக கொண்டு இயங்கிய தொலைக்காட்சி நிலையம் ஒன்றுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது

குறித்த நிறுவனம்  சட்டவிரோதமான முறையில் தொலைகாட்சி , வானொலி நிலையம் என்பவற்றை இயக்கியதாகவும், அதனாலையே குறித்த நிறுவனம் கொழும்பில்  இருந்து வந்த தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணையாக அதிகாரிகளால்  மூடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த  நிறுவனத்தில் இருந்து...

லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் தலைவராக வீரசூரிய நியமனம்

லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் தலைவராக நீதவான் டைடஸ் புத்திபால வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். ஆணைக்குழுவின் தலைவராக நீதவான் ஜகத் பாலப்பட்டபந்தி கடமையாற்றி வந்தார். பாலபட்டபந்தி ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாக தற்போதைய அரசாங்கம் குற்றம் சுமத்தி...

புத்தளம் முஸ்லிம் பள்ளிவாயிலுக்குள் மோதல்: 14 பேர் கைது

புத்தளம் , முஸ்லிம் பள்ளிவாயிலில் நடைபெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இந்தச் சம்பவம் நடைபெற்றதாக முந்தளம் பொலிசார் தெரிவித்துள்ளனர். பள்ளிவாயலில் சேர்ந்த நன்கொடைகளை பகிர்ந்தளிப்பது தொடர்பாக இருதரப்பினருக்கிடையில் ஏற்பட்ட...