நிறுத்தப்படும் வடக்கிற்கான இரயில் சேவைகள்
வடக்கு ரயில் மார்க்கத்தை நவீனமயமாக்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜனவரி 07 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே மஹவ தொடக்கம் அனுராதபுரம் வரையான வடக்கு ரயில் மார்க்கம் அன்றைய...
‘யுக்திய’ மீண்டும் ஆரம்பம்
போதைப்பொருள் வர்த்தகர்கள் மற்றும் குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்களை கைது செய்வதற்கான யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கை இன்று (27) முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பண்டிகை கால விசேட கடமைகளுக்காக பொலிஸ் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்தியமையினால்...
நெல் மூட்டைகள், பசளைகள் களஞ்சியசாலை உடைப்பு
பாறுக் ஷிஹான்
களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 10 நெல் மூட்டைகள் 2 பசளைகள் கதவு உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் செவ்வாய்க்கிழமை (26) இச்சம்பவம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...
ஆழிப்பேரலையின் அவலங்களை சுமந்து யாழில்நினைவேந்தல்
ஆழிப்பேரலையின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
இலங்கையை சுனாமி ஆட்கொண்டு இன்றுடன் 19 ஆண்டுகள் கடந்த நிலையிலேயே இந்த நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது.
உடுத்துறை சுனாமிப் பொது நினைவாலயத்தில்...
கண்ணீரால் நனைந்த முல்லைத்தீவு சுனாமி நினைவாலயம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு மார்கழி 26ஆம் திகதி இடம்பெற்ற ஆழிப் பேரலை அனர்த்தத்தால் காவு கொள்ளப்பட்டவர்கள் நினைவாக முல்லைத்தீவில் சுனாமி நினைவேந்தல் வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.
மத வழிபாடுகள்
காலை 8 மணிக்கு...
களுத்துறை கட்டுகுருந்த கடற்கரையில் நீரில் மூழ்கி பலியான பொலிஸ் கான்ஸ்டபிள்
கட்டுகுருந்த கடற்கரையில் தனது நண்பர்களுடன் நீராடச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
களுத்துறை நாகொட பிரதேசத்தில் வசித்து வந்த தெஷாஞ்சன தரிந்த(22 வயது) என்ற கான்ஸ்டபிளே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த...
கிளிநொச்சி இரணைமடு குளத்தின் மேலதிக நீர் வெளியேற்றம்
இரணைமடுக்குளத்தின் மேலதிக நீர் வெளியேற்றத்தின் காரணமாக சுமார் எண்ணாயிரம் ஏக்கர் வரையான நெற்பயிர்கள் பகுதியளவிலும் முழுமையாகவும் அழிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஒவ்வெரு விவசாயிகளும் ஏக்கர் ஒன்றுக்கு சுமார் ஒரு இலட்சத்து 76 ஆயிரத்து 300 ரூபாய்...
இளம் பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த கதி
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
நுரைச்சோலை பிரதேசத்தில் மது விருந்தின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் தாக்குதலுக்கு உள்ளாகி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவரே இவ்வாறு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நுரைச்சோலை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும்...
பேருந்து சாரதியின் கவனயீனம்: பரிதாபமாக பலியான கால்நடைகள்
யாழ்ப்பாணம் பிரதான வீதி நாயாத்துவழி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 8 மாடுகள் உயிரிழந்துள்ளன.
குறித்த விபத்து சம்பவம் நாயாத்துவழி பகுதியில் நேற்று திங்கள் (25) மாலை இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் நோக்கி பயணிகளுடன் அதிவேகமாக...
யாழில் 11 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு
தாவடியைச் சேர்ந்த ஆண் குழந்தையொன்று டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளது.
மதுரன் கிருத்திஸ் என்ற பதினொரு மாத குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....