செய்திகள்

நகர் புறங்களிலுள்ள சிறைச்சாலைகள் கிராம புறங்களுக்கு கொண்டு செல்லத் தீர்மானம்

நகர் பகுதிகளிலுள்ள சிறைச்சாலைகளை, கிராமப்புறங்களுக்கு மாற்றவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை கிராமங்களுக்கு மாற்றப்படும் சிறைச்சாலைகள், திறந்தவெளி சிறைச்சாலைகளாக செயற்படும் எனவும் அமைச்சின் செயலாளர் வி.சிவஞானஜோதி குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இந்த திறந்தவெளி...

ஜனாதிபதிக்கு மேலதிக நிதியொதுக்கீடு! நாடாளுமன்றத்தில் அனுமதி கோரி குறைநிரப்புப் பிரேரணை

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் அலுவலக செலவினங்களுக்காக ஒருகோடி ரூபா மேலதிக நிதியொதுக்கீட்டுக்கான குறைநிரப்புப் பிரேரணையொன்று நேற்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆளுங்கட்சியின் பிரதம அமைப்பாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கயந்த கருணாதிலக்க இக்குறைநிரப்புப் பிரேரணையை நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். ஜனாதிபதியின்...

மஹிந்தவின் மக்கள் தொடர்பு காரியாலய திறப்பு விழா

முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் விவகார மற்றும் மக்கள் தொடர்புக் காரியாலயம் இன்று பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் திறந்து வைக்கப்படவுள்ளது. குறித்த நிகழ்வு மஹிந்த ராஜபக்ஷவின்...

பத்து ஹெரோயின் வழக்குகளில் பிணையில் நிற்கும் பெண் மீண்டும் கைது!

மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் பத்து ஹெரோயின் விற்பனை வழக்குகளில் ஆஜர் செய்யப்பட்டு பிணையில் வெளிவந்த பெண்ணொருவர், மீண்டும் அதே குற்றத்துக்காக கைது செய்யப்பட்டிருப்பதாக வெலிக்கடை பொலிஸார் தெரிவித்துள்ளார். ஒரு பிள்ளையின் தாயான 'குட்டி' என...

70 அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு

நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலையில் 70 அத்தியாவசிய மருந்துப் பொருள் வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த இரண்டு வாரங்களாக மருந்துப்பொருட்களுக்கு இவ்வாறு தட்டுப்பாடு நிலவி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. புற்று நோய், சிறுநீரக நோய், இரத்த...

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான அறிக்கை 2017ல் ஐ.நாவில் சமர்ப்பிக்கப்படும்

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணை அறிக்கை எதிர்வரும் 2017ம் ஆண்டில் ஐ.நா.மனித உரிமை ஆணையத்தின் அமர்வில் சமர்ப்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இந்த வருடம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் ஆணையத்தின் இரண்டு அமர்வுகளிலும் இலங்கையின்...

எம்பிலிப்பிட்டிய இளைஞனின் மரணம் தொடர்பாக வாக்குமூலம் பெற ஐந்து பொலிசாருக்கு சீ.ஐ.டி. அழைப்பு!

எம்பிலிப்பிட்டிய இளைஞனின் சந்தேக மரணம் தொடர்பாக வாக்குமூலமொன்றைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் ஐந்து பொலிசாருக்கு சீ.ஐ.டி. யினர் அழைப்பு விடுத்துள்ளனர். கடந்த ஜனவரி ஐந்தாம் திகதி எம்பிலிப்பிட்டிய நகரில் நடைபெற்ற விருந்து வைபவம் ஒன்றில்...

நல்லாட்சி அரசாங்கம் மக்கள் பணத்தை கொள்ளையிடுகின்றது! ரில்வின் சில்வா

நல்லாட்சி அரசாங்கம் மக்கள் பணத்தை கொள்ளையிட்டு வருவதாக ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். பெலவத்தையில் அமைந்துள்ள கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ரில்வின் சில்வா மேலும்...

ஒழுக்க விதிகளை மீறுவோரை தண்டிக்கும் நோக்கில் மைத்திரி தலைமையில் விசேட கூட்டம்!

கட்சியின் ஒழுக்க விதிகளை மீறும் உறுப்பினர்களை தண்டிக்கும் நோக்கில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செற்குழு இன்று விசேட கூட்டமொன்றை நடாத்த உள்ளது. கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்தக் கூட்டம்...

அனுமதியின்றி மஹிந்த கட்சிக் கூட்டங்களை நடாத்துகின்றார்! துமிந்த திஸாநாயக்க

அனுமதி எதுவுமின்றி குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ கட்சிக் கூட்டங்களை நடாத்துவதாக ஸ்ரீலங்கா சுத்நதிரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர்...