CSK அணியில் இருந்து விலகிய முக்கிய வீரர் – இன்றைய போட்டியின் நிலை?

153

 

சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கான போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில், CSK அணியில் இருந்து விலகிய முக்கிய வீரர் ஒருவர் விலகியுள்ளார்.

அணியில் இருந்து விலகிய முக்கிய வீரர்
சென்னை அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான மதீஷா பதிரனா இன்றைய போட்டியில் பங்கேற்க மாட்டார் என சென்னை அணியின் பவுலிங் பயிற்சியாளர் எரிக் சைமன்ஸ் தெரிவித்துள்ளார்.

இறுதியாக சென்னை அணிக்கு எதிராக மோதிய சன்ரைசர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்த போட்டியிலும் மதீஷா பதிரனா பங்கேற்காதது பின்னடைவை ஏற்படுத்தியதாக கூறப்பட்டிருந்தது.

இந்த ஆண்டு நடைபெற்று வரும் IPL தொடரில் சென்னை அணிக்காக 2 போட்டியிலும் விளையாடிய மதீஷா பதிரனா 4 விக்கெட் கைப்பற்றியிருந்தார்.

காயம் காரணமாக மதீஷா பதிரனா சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்கவில்லை.

தற்போது காயத்திலிருந்து முழுவதுமாக குணமடையாமல் இருப்பதால் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

SHARE