சௌந்தர்யா ரஜினிகாந்த் Eros நிறுவனத்தில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக தென்னக பிரிவின் தலைமை பதவியை வகித்தார்.
இந்நிலையில் சமீபத்தில் அவருக்கு குழந்தை பிறந்த காரணத்தால் இப்பணியை இனிமேல் தொடர முடியாது என்றும் Eros நிறுவனத்தில் இருந்து விலகியதாக அவரே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சௌந்தர்யா ரஜினிகாந்த் பணி செய்த காலத்தில் Eros பல தமிழ் முன்னணி மற்றும் சின்ன பட்ஜெட் திரைப்படங்களை கூட உலகமெங்கும் விநியோகம் செய்தது குறிப்பிடத்தக்கது