கொள்ளை அடிக்காமல், குடும்ப அரசியலுக்கு இடமளிக்காமல் இருந்திருந்தால் இலங்கை அரசியலில் அண்மைகாலத்தில் உருவான சிறந்த தலைவராக மகிந்த ராஜபக்ச இருந்திருப்பார் என ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். குடும்ப அரசியல் அவர் மேலும் தெரிவிக்கையில், "மகிந்த ராஜபக்ச எனக்குப் பல கெடுதல்களைச் செய்தார். எனக்கு எதிராக கீழ்த்தரமான நடவடிக்கைகளை முன்னெடுத்தார். ஆனால், நாடாளுமன்றத்தில் இன்று...
  பெட்ரோலிய சில்லறை விற்பனை நடவடிக்கைகளில் கடந்த மாதம் பிரவேசித்த யுனைடெட் பெட்ரோலியம் அவுஸ்திரேலியா, 2024 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கான அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவை சேர்ந்த இந்த பெட்றோலிய சில்லறை விற்பனையாளர் மற்றும் இறக்குமதியாளர் நிறுவனம், முதலீட்டு சபையுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட திட்டமிட்டுள்ளது. உரிமம் பெற திட்டம் அத்துடன் இந்த ஆண்டின் பிற்பகுதியில் அதற்கான உரிமத்தைப் பெறவும் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர்...
  வடக்கின் மன்னார் பிரதேசத்தில் கண்டறியப்பட்ட மனித புதைகுழியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட மனித எலும்புகள் தொடர்பான காபன் பரிசோதனைகள் மேலும் தாமதமாகுமென இந்த வழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பில் முன்னிலையாகும் சடடத்தரணிகள் தெரிவிக்கின்றனர். மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலய வளாக மனித புதைகுழி குறித்த வழக்கு விசாரணை கடந்த திங்கட்கிழமை (மார்ச் 14) மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கு விசாரணைகளில் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட...
  மத்திய மலைநாட்டில் சுமார் ஒருமாத காலமாக கடுமையான வறட்சியான காலநிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக மவுஸ்ஸாக்கலை மற்றும் காசல்ரீ ஆகிய இரண்டு நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 25 சதவீதமாக குறைந்துள்ளது. மவுஸ்ஸாக்கலை, காசல்ரீ, லக்ஷபான நீர்மின்சார வளாகத்தின் கீழ் உள்ள இரண்டு நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. மின் தடை நேற்று காலை 06.00 மணி நிலவரப்படி 24 அடி மற்றும் 22 அடியாக இருந்ததாக நீர்த்தேக்கங்களுக்கு பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்தனர். இந்த நிலைமை...
  வன்னியின் கொக்குத்தொடுவாய் பகுதியில் எட்டு மாதங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட சடலங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுடையது எனத் தெரியவந்துள்ளது. கொக்குத்தொடுவாய் புதைகுழியில் இருந்து எடுக்கப்பட்ட சடலங்கள் 1994 மற்றும்1996 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் புதைக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுடையது என முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் கையளிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையில் தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ் சோமதேவ குறிப்பிட்டுள்ளார். பேராசிரியர் ராஜ் சோமதேவ நீதிமன்றில் கையளித்த குறித்த...
  வலி வடக்கு பிரதேசங்களில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்குள் திருடர்கள் புகுந்து பெறுமதியான மரங்களை வெட்டி எடுத்து செல்வதுடன் , வீட்டில் காணப்படும் பெறுமதியான பொருட்களையும் கொள்ளையிட்டு செல்வதாக காணி உரிமையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கடந்த 33 வருட காலமாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த சுமார் 67 ஏக்கர் காணி அண்மையில் காணி உரிமையாளர்களிடம் மீள கையளிக்கப்பட்டுள்ளது. விடுவிக்கப்பட்ட காணிகள் விடுவிக்கப்பட்ட தமது காணிகளுக்குள் உடனே சென்று மீள் குடியேற முடியாத நிலையில் காணி உரிமையாளர்கள்...
  வெப்பநிலையுடன் கூடிய வானிலை எதிர்வரும் மே மாதம் வரையில் நீடிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. தற்பொழுது நிலவி வரும் அதிக வெப்பத்துடனான வானிலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டாலும் மே மாதம் வரையில் வெப்பநிலை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீர் ஆவியாதல் அதிகரிப்பு காற்றின் வேகம் குறைதல், வளிமண்டலத்தில் நீர் ஆவியாதல் அதிகரிப்பு போன்ற ஏதுக்களினால் வெப்பநிலை அதிகரித்துள்ளது. இதற்கமைய மேல் மாகாணம், வவுனியா, மன்னார், ஹம்பாந்தோட்டை, அனுராதபுரம், பொலனறுவை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் கூடுதலான...
  கடத்தல்காரர்களான ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து ஆகியோரின் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் இரண்டு கடவுச்சீட்டுகள் காணாமல்போயுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தின் பயங்கரவாத புலனாய்வு பிரிவு மற்றும் விசேட புலனாய்வு பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து ஆகியோர் மடகஸ்கரில் கைது செய்யப்பட்டதன் பின்னர், இருவரும் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி இலங்கைக்கு அழைத்து...
  அரச ஊழியர்களை குறைக்காமல், வரவு செலவு திட்டத்தில் அவர்களுக்கு கொடுப்பனவை அதிகரித்துக் கொடுத்தோம் என உள்நாட்டலுவல்கள் அமைச்சரும், பிரதமருமான தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். புத்தளம் மாவட்டத்தின் முந்தல் பிரதேச செயலகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடத்தை மக்கள் பாவனைக்காக திறந்துவைத்து உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார். பொருளாதார நெருக்கடி இது தொடர்பில் மேலும் கூறுகையில்,''எமது நாடு பொருளாதார ரீதியாக கடும் நெருக்கடியை எதிர்நோக்கிய போதுதான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பெடுத்தார். இதன்போது அரச...
  மரக்கறி வகைகளின் விலைகள் வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளது. கோவா தவிர்ந்த மேல்நாட்டு, கீழ்நாட்டு மரக்கறி வகைகள் பலவற்றின் விலைகள் குறைவடைந்துள்ளது. அநேகமான பொருளாதார மத்திய நிலையங்களில் ஒரு கிலோ கிராம் போஞ்சியின் விலை மொத்த விற்பனை விலை 300 ரூபாவாக காணப்பட்டது. மரக்கறி வகைகள் ஒரு கிலோ கிராம் கரட்டின் விலை 430 ரூவாக காணப்பட்டது. ஒரு கிலோ கிராம் லீக்ஸின் விலை 150 முதல் 250 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஒரு கிலோ...