திரையுலகில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் பாலா. இவர் இயக்கத்தில் தற்போது வணங்கான் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் குறித்து சமீபத்தில் சர்ச்சை எழுந்தது. இப்படத்தில் நடித்து விலகிய நடிகை மமிதா பைஜூவை பாலா அடித்ததாக தகவல் ஒன்று வெளிவந்தது. ஆனால், தன்னை இயக்குனர் பாலா அவர்கள் அடிக்கவில்லை, அப்படி எதுவுமே நடக்கவில்லை என கூறிய, அனைத்து சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி வைத்தார் நடிகை மமிதா பைஜூ. பாலா இயக்கத்தில் பாலகிருஷ்ணா இந்த சர்ச்சை எழுந்த...
  தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த சைரன் திரைப்படம் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அடுத்ததாக பிரதர், காதலிக்க நேரமில்லை, ஜீனி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ஜெயம் ரவி தனது சினிமா வாழ்க்கையில் நடந்த பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துகொண்டார். ஈகோ பிரச்சனை இதில், 'உங்களுக்கு ஒரு கதை சொல்லி, அதை...
  நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் தன்னை நிரூபித்து வருகிறார் தனுஷ். ஏற்கனவே இவர் இயக்கத்தில் வெளிவந்த பா. பாண்டி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.. இதன்பின், தற்போது தன்னுடைய 50வது படத்தை இயக்கி, நடித்து வருகிறார். இப்படத்திற்கு ராயன் என தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷான், காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி...
  பின்னணி பாடாகி, நடிகை என திரையுலகில் கலக்கி கொண்டிருப்பவர் ஆண்ட்ரியா. கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டுமே தான் இவர் தேர்தெடுத்து நடிப்பார். மேலும் இவர் நடிப்பில் வெளிவந்த ஆயிரத்தில் ஒருவர், அவள், வடசென்னை போன்ற படங்கள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. அதில் குறிப்பாக ஆண்ட்ரியாவின் நடிப்பு வேற லெவலில் இருக்கும். இந்நிலையில், எந்த விஷயமாக இருந்தாலும் தைரியாக பேசும் நடிகை ஆண்ட்ரியா, தன்னுடைய 11வது வயதில் நடந்த...
  ஹிஜாப் விவகாரத்திற்கு பிறகு ஈரான் எதிர்கொள்ளும் முதல் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்றையதினம் (01-03-2024) நடைபெற்று வருகிறது. ஈரானிய அரசாங்கம் ஹிஜாப் அணிவதைக் கட்டாயமாக்கியதைத் தொடர்ந்து அங்கு பாரிய போராட்டம் வெடித்து பரபரப்பை ஏற்படுத்திருந்தது. இதன்போதும் 22 வயதான மஹ்சா அம்னி சிறைசாலையில் உயிரிழந்தார். ஈரானிய அரசின் இறையாட்சியை மாற்ற குரல் கொடுக்கும் யாருக்கும் தேர்தலில் நிற்க அனுமதியளிக்கப்படவில்லை. தேர்தலில் நிற்பவர்களில் பெரும்பாலானவர்கள் பழமைவாதிகள் மற்றும் கடினபோக்காளர்கள் மட்டுமே. ஈரான் பொருளாதாரம்...
  தாய்வானுக்கு அருகில் கடந்த 24 மணித்தியாலத்தில் 19 சீன இராணுவப் போர் விமானங்கள் மற்றும் 7 கடற்படைக் கப்பல்கள் ரோந்து சென்றதாக அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீனாவின் நடவடிக்கைக்கு பின்னர், தாய்வான் இராணுவம், விமானப்படை விமானங்கள், கடற்படை கப்பல்கள் மற்றும் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளை நிலைநிறுத்தியுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் சீனாவின் போர் விமானங்கள் 253 முறையும் கடற்படை கப்பல்கள் 150 முறையும் தாய்வானின் வான்பரப்பு மற்றும்...
  பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் ஆறு மாடி கட்டிடத்தில் ஒரே இரவில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் குறைந்தது 43 பேர் உயிரிழந்துடன் மற்றும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர் என்று நாட்டின் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். டாக்காவின் பெய்லி சாலையில் உள்ள பிரபலமான பிரியாணி உணவகத்தில் வியாழக்கிழமை பிற்பகுதியில் ஏற்பட்ட தீ, விரைவில் மற்ற தளங்களுக்கும் பரவியதாக தீயணைப்பு சேவை அதிகாரிகள் தெரிவித்தனர். குறைந்தது 43 பேர் இறந்துள்ளனர் மற்றும் 22 பேர்...
  வங்களாதேசத்தில் உள்ள அடிக்குமாடி கட்டிடம் ஒன்றில் இயங்கிவரும் ஒரு பிரியாணி கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு 46 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் வங்களாதேசம் தலைநகர் டாக்காவில் பெய்லி சாலையில் 7 மாடிகளை கொண்ட அடுக்குமாடி கட்டிடத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த அடுக்குமாடி கட்டிடத்தில் வணிக வளாகங்கள், உணவகங்கள், செல்போன் கடைகள் உள்பட பல்வேறு கடைகள் அமைந்துள்ளன. இந்த நிலையில், அந்த அடுக்குமாடி கட்டிடத்தில் அமைந்துள்ள பிரியாணி கடையில்...
  கனடா இந்தியா தூதரக உறவுகளில் ஏற்பட்டுள்ள விரிசலால், கனடாவுக்கு புலம்பெயரும் இந்தியர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அலுவலக தரவுகள் தெரிவிக்கின்றன. கனடாவில் கொல்லப்பட்ட கனேடியர் ஒருவரின் மரணத்தின் பின்னணியில் இந்தியா இருக்கலாம் என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பகிரங்கமாக குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து இரு நாடுகளும் எடுத்த நடவடிக்கைகளால், கனடா இந்தியாவுக்கிடையிலான தூதரக உறவு கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில், கனடா இந்தியா தூதரக உறவுகளில்...
  நான்கு ஆண்டுகளுக்கு ஒரு தடவை வரும் லீப் ஆண்டில் ரொறன்ரோவில் பிறந்த குழந்தைகள் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ரொறன்ரோ பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு மருத்துவமனைகளில் ஐந்து குழந்தைகள் நேற்றைய தினம் பிறந்துள்ளன. ரொறன்ரோ பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு மருத்துவமனைகளில் ஐந்து குழந்தைகள் நேற்றைய தினம் பிறந்துள்ளன.குயின்ஸ்வெ ஹெல்த் சென்டர் மற்றும் ட்ரில்லியம் ஹெலத் பார்ட்னர்ஸ் மருத்துவமனைகளில் இவ்வாறு சிசுக்கள் பிறந்துள்ளன. லீப் நாளில் பிரசவிக்கப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன. இதேவேளை, பெப்ரவரி...