போராட்ட வடிவம் மாறலாம். ஆனால் போராட்டத்தின் நோக்கம் என்றைக்கும் மாறாது. கில்மிசாவினுடைய வெற்றியும் ஒரு போராட்டத்தின் தடமாகத்தான் பார்க்கப்பட்டது. அதனால்தான் இத்தனை கொண்டாட்டங்களும் ஆதரவும் அவருக்கு கிடைத்தது. பிள்ளை திறமையானவள். ஆனால் அந்த மேடையை திறமைக்கான களமாக மட்டும் பயன்படுத்தவில்லை. எமக்கு நடந்த அநீதிகளை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்துவதற்காகவும் அவள் அந்த மேடையை பயன்படுத்தியிருக்கிறாள் என்பதே அவளின் வெற்றியை இனத்தின் வெற்றியாக கொண்டாடியவர்களது எண்ணப்பாடாக இருந்தது....
  போரினால் அவயங்கள் மற்றும் கால்களை இழந்தவர்களுக்கு செயற்கை கால் வழங்கும் நிகழ்வு யாழில் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைவாக நல்லெண்ண அடிப்படையில் அமைச்சர் பந்துல குணவர்ததன செயற்கை கால்களை வழங்கி வைத்துள்ளார். ஜனாதிபதியின் எண்ணக்கரு மாவட்ட செயலர்களின ஊடாக கால்களை இழந்த 101 மாற்றுதிறானளிகளின் பெயர்கள் இதன்போது, முன்மொழியப்பட்டுள்ளது. இதன்பொழுது அமைச்சர் பந்துல குணவர்த்தன, வடமாகாண ஆளுநர் சார்ள்ஸ் ,மாவட்ட செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் உட்பட்ட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
  இசை போட்டி நிகழ்ச்சியில் வெற்றியாளர் பட்டத்தைச் சூடிய கில்மிஷா உதயசீலனை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேரில் சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (04.01.2024) நடைபெற்ற சிவில் சமூகப் பிரதிநிதிகளைச் சந்திக்கும் கூட்டத்தின்போதே, கில்மிஷா மற்றும் அவரது குடும்பத்தினரை ஜனாதிபதி சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இசை போட்டி நிகழ்ச்சி தென்னிந்திய தொலைக்காட்சிகளில் நடைபெறும் இசை போட்டி நிகழ்ச்சியில் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் வெற்றி பெற்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும். இறுதிச் சுற்று வரை முன்னேறிய கில்மிஷாவுக்கு...
  ருவான் பிரசன்ன குணரத்னவின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டதாக சந்தேகிக்கப்படும் மற்றுமொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திம்புலாகலை சிறிபுர பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை விஷம் அருந்தியதால் தெஹியத்தகண்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறிபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த நபர் மற்றும் அவரது மனைவி விரிவுரைகளை வழங்கிய ருவன் பிரசன்ன குணரத்னவின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டிருந்ததாகவும் நுவரகலைச் சேர்ந்த சுமார் ஐந்து பேரும் கலந்து கொண்ட நிலையில் பொலிஸ்...
  மின்சாரக் கட்டணத்தை 50 வீதத்தினால் குறைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் மின்சாரக் கட்டணம் 18 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது. பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதியின் அடிப்படையில் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டது. அதிகரிக்கப்பட்ட கட்டணம் கடந்த ஒக்டோபர் மாதம் அதிகரிக்கப்பட்ட மின்சாரக் கட்டணத் தொகையை 50 வீதத்தினால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சார சபையின் ஊடகப்பேச்சாளர் நோயல் பிரியந்த இதனைத் தெரிவித்துள்ளர். மேலும் நாட்டில் தற்பொழுது நீர் மின் உற்பத்தி அதிகரித்துள்ளதாக...
  கடற்றொழிலுக்கு சென்ற நபரொருவர் கடலில் மயங்கிய நிலையில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று(04.01.2024) இடம்பெற்றுள்ளது. இதன்போது யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய அமலசூரி அன்ரனியூட் என்ற 5 பெண் பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். மரண விசாரணை இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், உயிரிழந்த நபர் உட்பட மூவர் நேற்று முன்தினம்(03) இரவு 10.30 மணியளவில் கடற்றொழிலுக்கு சென்றுள்ளனர். இதன்போது அமலசூரி அன்ரனியூட் திடீரென மயக்கமடைந்துள்ளார். அவருடன் சென்றவர்கள் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்...
  திருகோணமலை - உட்துறைமுக வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் சிக்கிய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே குறித்த நபர் இன்று (05.01.2024) உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர், கடந்த முதலாம் திகதி வீதியை கடக்க முற்பட்டபோது மூதூர் டிப்போவுக்கு சொந்தமான பேருந்துடன் மோதி, படுகாயமடைந்துள்ளார். பொலிஸார் விசாரணை தொடர்ந்து, அவர் திருகோணமலை பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதையடுத்து சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் உயிரிழந்துள்ளதாக...
  வான் ஒன்று விபத்துக்குள்ளான நிலையில் உயிரிழந்த தாய், மகள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பத்தேகம பகுதியில் லொறி ஒன்றும் வேன் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர். இலங்கை வங்கியின் பெரகம கிளையின் உதவி முகாமையாளராக கடமையாற்றிய 30 வயதான உமேஷிகா மதுமி மற்றும் 56 வயதான அவரின் தாய் ஆகியோரே உயிரிழந்துள்ளனர். வாகன விபத்து இவர்கள் அம்பலாந்தோட்டை பெரகம பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த மகள்...
  இம்முறை தைப்பொங்கல் கொண்டாட்டத்தின் பின்னர் அரச ஊழியர்களுக்கு சலுகை நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திய பின்னர் மக்களுக்கு சலுகை. கடந்த வருடத்தில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்த்திருத்தின் காரணமாக நிலுவையிலிருந்த அனைத்து பத்திரங்களும் செலுத்தி முடிக்கப்பட்டுள்ளன. 2025 க்கு முன்னர் மீள்குடியேற்றத்தை முழுமையாக நிறைவு செய்ய அறிவுறுத்தல். காணாமல் போனோரை தேடும் பணிகள் துரிதப்படுத்தப்படும். வடக்கின் காணி பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண காணி அமைச்சின் அதிகாரிகள் வடக்கிற்கு. வடக்கை போலவே முழு...
  இராணுவ ரீதியாகத் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை அடக்கிய சிங்கள அரசு, இப்போது வரலாற்று ரீதியாக அவர்களை அடிமைப்படுத்தி, தமிழ்த் தேசியத்தைச் சிதைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேரே – வடக்கும் கிழக்கும் தமிழரின் மரபுவழித் தாயகம், தமிழர்கள் ஒரு தேசிய இனம், தமிழ் மக்களுக்கு தன்னாட்சி உரிமை உள்ளது ஆகிய விடயங்கள் தான். தமிழ் மக்களின் தாயகக் கோட்பாட்டைச் சிதைத்து, அவர்களின் தனித்துவமான தேசிய அடையாளங்களை...