இளம் பெண் ஒருவரை திருமணம் செய்ய முயன்ற இந்திய பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார். வாத்துகாம பகுதியை சேர்ந்த ஆசிரியையாக பணியாற்றும் இளம் பெண்ணை திருமணம் செய்ய முயன்ற 26 வயதான இளைஞனை கண்டி பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த இளைஞன் தன்னை ஊடகவியலாளராகவும் மற்றும் திரைப்பட நடிகராகவும் அறிமுகம் செய்துள்ளார். குறித்த பெண்ணின் வீட்டுக்கு சென்ற இளைஞன், திருமணம் செய்ய விரும்பம் தெரிவித்துள்ளனார். எனினும் பெண்ணின் பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளனர். திருமணம் செய்ய...
  பிரமிட் திட்டங்களில் ஈடுபடும் மேலும் எட்டு நிதி நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு நேற்றைய தினம் (22.04.2024) வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கிக்கு கிடைத்த முறைப்பாடுகளின்படி, 1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கிச் சட்டத்தின் 83(c) பிரிவை மீறி தடை செய்யப்பட்ட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா என்பது தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. தண்டனைக்குரிய குற்றம் விசாரணை அறிக்கைகளின்படி, எட்டு வங்கிச் சட்டத்தின் பிரிவு 83(c)ஐ மீறி நிறுவனங்கள்...
  தேராவில் குளம் நிரம்பி மேலதிக நீர் வெளியேற முடியாத நிலை காணப்படுவதால் அப்பகுதியிலுள்ள வீடுகள் சுமார் நான்கு மாதங்களாக வெள்ள நீரால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதன் காரணமாக அப்பகுதியை சேர்ந்த தாயொருவர் உயிரிழந்த தனது மகனின் மரணச்சடங்கை வீட்டில் செய்ய முடியாது தவிக்கும் நிலையும் உருவாகியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 18ஆம் திகதி முதல் சுமார் நான்கு மாதங்களுக்கு மேலாக தேராவில் குளத்தின் மேலதிக நீரால் அப்பகுதி வீடுகள் நிரம்பியிருக்கும் நிலையில்...
  ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமானவர்களின் தேசிய பட்டியல் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதாக ஜே.வி.பி உறுதியளித்துள்ளதை விட கேலிக்கூத்து ஒன்றும் இல்லை என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கத்தோலிக்க மக்களை கொன்று குவித்த ஜே.வி.பிக்கு இம்முறை கத்தோலிக்க வாக்குகள் கிடைக்கும் என நம்ப முடியாது என அமைச்சர் தெரிவித்தார். களனியில் நேற்று (21) இடம்பெற்ற குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு அரிசி வழங்கும் வைபவம் ஒன்றின் பின்னர்...
  பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரை தாக்க இ.தொ.க உப தலைவர் செல்லமுத்துவின் அடியாட்கள் தாக்க முயற்சித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஊடக பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது. புசல்லாவை அருள்மிகு ஸ்ரீ மஹா கணபதி ஆலயத்தின் அடிக்கல் நாட்டு விழா இன்று (21) காலை நடைப்பெற்றது. அந்நிகழ்வில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரும் கலந்துகொண்டிருந்தார். அந்நிகழ்வின் பின்னர் தனது அடுத்த நிகழ்விற்காக சென்றிருந்த வேலுகுமாரை இ.தொ.க.வின் உப தலைவர் செல்லமுத்து உட்பட...
  நாட்டையே உலுக்கிய தியத்தலாவ பொக்ஸ் ஹில் மோட்டார் பந்தயத்தின் போது நேற்று (21) இடம்பெற்ற விபத்தில் சிறுமி உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து தொடர்பில் இரு கார் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு வாகன சாரதிகளையும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  பட்டானிச்சூர் பகுதியில் மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒறுமோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளமையுடன் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பட்டானிச்சூர் அரச பாடசாலையினை அண்மித்த பகுதியில் நேற்று (21) மதியம் இடம்பெற்ற விப்த்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், மூன்று வாகனங்கள் விபத்து வான், முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் ஆகிய மூன்றும் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ் விபத்தில் மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட...
  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெவோன் கான்வே-வுக்கு மாற்று வீரராக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்ட் கிளீசனை அணியில் சேர்த்துள்ளது. CSK-வில் புதிய வீரர் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி, ஐபிஎல் 2024 ன் மீதமுள்ள போட்டிகளுக்காக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்ட் கிளீசனை(Richard Gleeson) அணியில் இணைத்துக் கொண்டுள்ளதுகாயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ள டெவோன் கான்வே(Devon Conway) இடத்தை கிளீசன் நிரப்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிச்சர்ட் கிளீசன் சாதனைகள் 36...
  Impact Player எனும் விதிமுறை ஆல்ரவுண்டர்களின் வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கிறது என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். 2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 'Impact Player' எனும் விதிமுறை நடைமுறையில் உள்ளது. இதன்படி 12வதாக ஒரு வீரர் அணிக்கு களமிறங்கி விளையாடுவார். இது ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடியதாக உள்ளது. இதுகுறித்து பேசிய ரோஹித் சர்மா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அவர் 2022-23ஆம் ஆண்டு சையத் முஷ்தாக் அலி டி20 போட்டியில் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, IPL...
  குயின்டன் டி காக் மற்றும் கே.எல் ராகுலின் அதிரடி ஆட்டத்தால், லக்னோ அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. ஜடேஜா 34 பந்தில் அரைசதம் இன்று நடைபெற்ற 34-வது லீக் ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின. நாணய சுழற்சியில் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து சென்னை அணியின் தொடக்க வீரர்களாக...