பூகோள அரசியல் மாற்றங்கள் இலங்கையில் எத்தகைய செல்வாக்கைச் செலுத்துகின்றன? தமிழர் பிரச்சினைக்கான தீர்வில் இதன் தாக்கம் என்ன என்பது தொடர்பாக, அண்மைக்காலத்தில் தமிழர் அரசியல் பரப்பில் சூடான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்தியப் பெருங்கடலின் மையத்தில், கேந்திர முக்கியத்துவம் மிக்க இடத்தில் அமைந்திருப்பதால், பூகோள அரசியல் மாற்றங்களின் ஒவ்வொரு கட்டத்திலும், இலங்கைத் தீவு அதன் தாக்கத்துக்கு உட்படுகிறது. அதுவே தொடர்ந்தும் நிகழப்போகிறது. இது எவராலும் மாற்றப்பட முடியாத ஒரு விதியாகவே நீளும். அகிம்சைப்...
    கடந்த ஆண்டு அரசியற்கைதிகள் போராடிய போது அதில் யாழ் பல்கலைக்கழகமும் பங்குபற்றியது. கைதிகளுக்கு ஆதரவாக போராட்டத்தை முன்னெடுத்த சமூக அமைப்புக்களின் பிரதிநிதியாக அருட்தந்தை சக்திவேல் பல்கலைக்கழக மாணவர்களைச் சந்தித்தார். இச்சந்திப்பின் போது ‘நாங்கள் தலையிட்டால் அது உச்சக்கட்டப் போராட்டமாக இருக்க வேண்டும்’ என்று மாணவர்கள் கூறினார்கள். முடிவில் மாணவப் பிரதிநிதிகளும், சில அரசியல்வாதிகளும் சிறைச்சாலைக்குப் போனார்கள். அரச தரப்பைச் சேர்ந்த அங்கஜன் வழங்கிய வாக்குறுதிகளையடுத்து கைதிகள் உண்ணாவிரதத்தைக் கைவிட்டார்கள். ஆனால்...
  ஒழுங்கும், நேரான இலக்குமுள்ள, வஞ்சக உள்ளமற்ற, நேர்மையான தலைவனொருவனைக் காணும் பாக்கியத்தை இலங்கை எனும் தேசம் பெறவேயில்லை. தலைவனாக முகமூடியணிந்தவாறு, நாட்டு மக்களை பலிகடாக்களாக்கி விளையாடும் கோமாளிகளும், சுயநலவாத நரிகளும் ஆட்சிக்கு வந்து தேசத்தைச் சூறையாடுவதையே எப்போதும் செய்து கொண்டிருக்கிறார்கள். தமது கையாலாகாத்தனத்தை மூடி மறைப்பதற்காக அடுத்தவர் மீது பழி சுமத்தும் தலைவர்கள் இலங்கையை மீண்டும் மீண்டும் ஆண்டு கொண்டிருக்கிறார்கள். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன எனும் பொய்காரரை ஜனாதிபதியாக ஆக்கியது...
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு ஒப்பாக ஐக்கிய தேசியக்கட்சி மேற்கொண்ட வகை தொகையற்ற படுகொலைகளை இன்றும் வடக்கு கிழக்கில் முக்கியமாக காணலாம். அந்த இரத்தங்கள் இன்னும் காயவில்லை. மக்கள் அழுகுரல்கள் இன்னும் ஓயவில்லை. அதற்குள் ஐக்கிய தேசியக்கட்சியுடன் எப்படி கைகோர்க்க முடிகிறது. இதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன சப்பை கட்டை கட்டினாலும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களால் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. 1977 ஆம் ஆண்டு போரா சமாதானமாக என்ற தமிழ் மக்களுக்கு எதிரான...
கொழும்பு - மட்டக்குளி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி  பிரயோகத்தில் ஐவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். இச்சம்பத்தில் பெண் ஒருவர் உட்பட ஐந்து பேர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார் . மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு ஆயுததாரிகளே முச்சக்கரவண்டி ஒன்றின் மீது குறித்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொணடுவிட்டு தப்பி சென்றுள்ளனர். இதேவேளை, ஆயுததாரிகள் இனங்காணப்படவில்லையெனவும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்...
யாழ்ப்பாணம் சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று (திங்கட்கிழமை) யாழ்ப்பாணத்தில் அடையாள நடைபவனி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. நல்லூர் ஆலய முன்றலிலிருந்து மனித உரிமையை பிரகடனப்படுத்தும் பதாகைகளை தாங்கியவாறு ஊர்வலகமாக துர்க்காதேவி மண்டபம் வரை இந்த நடைபவனி முன்னெடுக்கப்பட்டது. அதன் பின்னர் யாழ். மனித உரிமைகள் முதலுதவிச் சங்கம் மற்றும் இலங்கை சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் மனித உரிமைகள் தின நிகழ்வும் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட்,...
இரத்தப்புற்றுநோய் இரத்தம் அல்லது எலும்பு மச்சையில் உண்டாகும் ஒருவகையான புற்றுநோய். இரத்த வெள்ளையணுக்களின் (White blood cells), அசாதாரணமான உருவாக்கம் மற்றும் பெருக்கத்தால் குறிப்பாக அறியப்படுகிறது. இரத்த புற்று நோய் ஏற்படுவதற்கான காரணங்கள் நோய்களை கண்டறிவதற்காக எடுக்கப்படும் X-ray பரிசோதனைகள் உடலின் எலும்புவரை ஊடுருவி செல்லும் தன்மை வாய்ந்ததால் அவை அணுக்களில் பாதிப்பை ஏற்படுத்தி இரத்த புற்று நோய் வர காரணமாக உள்ளது. அஸ்பெஸ்டோஸ் என்றழைக்கப்படும் கட்டட சுவர்களில் உள்ள இரசாயனங்கள்...
நமது உடலில் உள்ள ஏதேனும் ஒரு பாகங்களை அழுத்தினால் அதன் மூலம் நமக்கு நிவாரணம் கிடைப்பதுதான் அக்குபஞ்சர் மருத்துவம். நமது கை விரல்கள் அனைத்துமே உடலில் உள்ள ஏதேனும் ஒரு பாகத்தோடு தொடர்புடையது என்பதால், அதனை ஒரு நிமிடம் தடவுவதால் அந்த பாங்களுக்கும் ஆரோக்கியம் கிடைக்கும். ஆள்காட்டி விரல் இந்த விரலானது இரைப்பை குடலுடன் தொடர்புடையது. இதனை ஒரு நிமிடம் தடவும்போது வாயு பிரச்சனை மற்றும் செரிமானப்பிரச்சனைகள் இருந்து சில நிமிடங்களிலேயே நிவாரணம்...
பேயை திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்கிறேன் என கூறியிருந்த பெண், ஆவிகளுடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என புதிய தகவலை வெளியிடுள்ளார். அயர்லாந்தில் உள்ள ட்ரோகேடா பகுதியை சேர்ந்த அமண்டா ஸ்பார்ரோ லாரர்ஜ் என்ற 46 வயது பெண், இந்த ஆண்டு ஆரம்பத்தில் ஒரு கடற்கொள்ளையனை திருமணம் செய்துகொண்டார். 300 வயதான ஜாக் டீக் என்ற அந்த கடற்கொள்ளையன் 18ம் நூற்றாண்டிலே இறந்துவிட்டதாகவும், அவருடைய ஆவி தினமும் தன்னுடன் வந்து பேசுவதோடு,...
கர்ப்பிணி காதலியை இளைஞர் கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட நிலையில் காதலியின் சடலத்தை அவர் திருமணம் செய்து கொள்ள இறந்த பெண்ணின் தந்தை வலியுறுத்தியுள்ள சம்பவமொன்று நைஜீரியாவில் இடம்பெற்றுள்ளது. பிரின்ஸ் ஒவாபி என்ற இளைஞரும் பெர்தா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், பெர்தா கர்ப்பமடைந்தார். இதன்போது, பிரின்ஸ் வீட்டுக்கு பெர்தா வந்த போது இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. இதில் பெர்தாவை கொலை செய்த பிரின்ஸ் சடலத்தை தனது வீட்டிலேயே புதைத்தார். இந்நிலையில்...