இதுவரையிலும் குடல் பக்ரீரியாக்கள் பற்றி நாம் கேள்விப்பட்டதுண்டு. ஆனால் அண்மையில் பேர்மின்காம் அலாபாமா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்டிருந்த ஆய்வுகளில் மனிதரின் தலைப் பகுதியிலும் பக்ரீரியாக்கள் வாழ்வது கண்டறியப்பட்டுள்ளது. இவை மூளையின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு எண்ணிக்கையில் காணப்படுகின்றன. மேலும் நரம்புக் கலங்களின் தொடர்பாடலில் முக்கிய பங்குவகிக்கும் "அஷ்ரோசைற்ஸ்" எனப்படும் கலங்களிலும் பக்ரீரியாக்கள் கண்டறியப்பட்டுள்ளன. இப் பக்ரீரியாக்கள் குருதிக் குழாய்கள் மூலமாக மூளைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இதற்கென மேற்கொள்ளப்பட்டிருந்த ஆய்வில் இறந்து போன...
மத்திய அமெரிக்காவின் குவான்தமாலாவில் புவெகொ எரிமலை வெடிக்க ஆரம்பித்ததை அடுத்து அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து கிட்டத்தட்ட 4,000 பேர் இடம் மாற்றப்பட்டுள்ளனர். எரிமலைக் குழம்பு, நச்சுவாயு, கொதிக்கும் சாம்பல் ஆகியவற்றை எரிமலை கக்கி வருகிறது. பாதுகாப்பான இடங்களில் ஏற்கனவே 2,000 பேர் அடைக்கலம் புகுந்துள்ளனர். எரிமலையின் சாம்பல் புகை 3,763 மீற்றர் உயரமான எரிமலைக்கு மேலால் ஒரு கிலோமீற்றர் உயரத்திற்கு எழுந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெடிப்பு இந்த ஆண்டின் ஐந்தாவது...
அமெரிக்காவின் சிக்காகோ நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரு பெண்களுடன் சூடு நடத்திய நபர் மற்றும் பொலிஸ் அதிகாரி என நால்வர் உயிரிழந்துள்ளனர். பலியான இரண்டு பெண்களில் ஒருவர் மருத்துவர் மற்றொருவர் உதவி மருந்தாளராவார். பொலிஸாருக்கும் அந்த துப்பாக்கிதாரிக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் அவர் பலியாகி உள்ளார். துப்பாக்கிதாரி தம்மைதாமே மாய்த்து கொண்டாரா என தெரியவில்லை. இந்த தாக்குதல் பெண்ணை குறி வைத்து நடந்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த துப்பாக்கிதாரி தன்னுடன் நட்பில் இருந்த...
வவுனியா ஏ9 வீதியில் அமைந்துள்ள பலசரக்கு வர்த்தக நிலையம் ஒன்று உடைத்து திருடப்பட்ட சம்பவம் நேற்று (20) இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வர்த்தக நிலையத்தினை நேற்று திறப்பதற்காக சென்றிருந்த சமயத்தில் வர்த்தக நிலையம் உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ளதினை அறிந்த உரிமையாளர் உடனடியாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டு செய்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். வர்த்தக நிலையத்திலிருந்து தொலைபேசி மீள்நிரப்பு அட்டை...
சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நான்கு கேமரா கொண்ட கேலக்ஸி ஏ9 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. #GalaxyA9 சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ9 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்தது. புதிய மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் முன்னதாக மலேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. புதிய கேலக்ஸி ஏ9 ஸ்மார்ட்போன் மாடலில் சாம்சங் நிறுவனம் நான்கு பிரைமரி கேமரா சென்சார்களை வழங்கி இருக்கிறது. இதில் 24 எம்.பி சென்சார்,  f/1.7,...
பெண்களின் முகத்திற்கு அழகு சேர்க்கும் உதட்டை மிக கவனமாக பாதுகாத்தால் வெடிப்புகள் ஏற்படாமலும், மென்மையாகவும், அழகாகவும் காட்சி தரலாம். பெண்களின் முகத்திற்கு அழகு சேர்ப்பதில் உதடுகள் பெரும் பங்கு வகிக்கின்றன. அதனை மிக கவனமாக பாதுகாத்தால் வெடிப்புகள் ஏற்படாமலும், மென்மையாகவும், அழகாகவும் காட்சி தரலாம். * உதடுகள் மென்மையாக இருக்க, வெண்ணெயை லேசாகப் பூசி வரலாம். * சந்தனத்தை பன்னீரில் குழைத்து உதடுகளில் பூசி, ஊற வைத்து, கழுவி வந்தால் உதடுகள் மென்மையாகும். *...
கஜா புயல் டெல்டா மாவட்டங்களை புரட்டி போட்டுள்ளது. மக்கள் வீடு, உடமைகளை இழந்து உணவுக்கும் குடிநீருக்கும் அல்லாடும் நிலை உள்ளது. திரையுலகினர் நிவாரண உதவிகள் வழங்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். நடிகர் விஜய் சேதுபதி ரூ.25 லட்சம் நிவாரண பொருட்கள் வழங்குவதாக அறிவித்து உள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் முதல்-அமைச்சரின் புயல் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சமும் மேலும் ரூ.10 லட்சத்துக்கு நிவாரண பொருட்களும் வழங்குவதாக அறிவித்து உள்ளார். நடிகர் சிவகுமார்...
நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த பல்கேரிய அணி பயிற்சியாளர் பேடார் லிசோவை இடைநிறுத்தம் செய்து சர்வதேச குத்துச்சண்டை சங்கம் உத்தரவிட்டது. பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டியில் நேற்றுமுன்தினம் நடந்த 57 கிலோ எடைப்பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை சோனியா சாஹலுக்கு எதிரான போட்டியில் பல்கேரியா வீராங்கனை ஸ்டானிமிரா பெட்ரோவா தோல்வி கண்டதாக அறிவித்ததும் அதிருப்தி அடைந்த பல்கேரியா அணியின் பயிற்சியாளர் பேடார் லிசோவ் தண்ணீர் போத்தலை ரிங்...
களத்தில் இறங்கிவிட்டால் தடுத்து நிறுத்த முடியாத ரோஹித் சர்மா ஒருநாள் மற்றும் ரி 20 போட்டியில் மிகச்சிறந்த ஸ்டார் என்று மேக்ஸ்வெல் புகழாரம் சூட்டியுள்ளார். இந்திய அணியின் தொடக்க துடுப்பாட்ட வீரரான ரோஹித் சர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஒருநாள் போட்டியில் அதிக இரட்டைச் சதங்களும், ரி 20 போட்டியில் அதிக சதமும் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். அவுஸ்திரேலியா -- இந்தியா இடையிலான மூன்று போட்டிகள்...
இலங்கையின் மிகப் பழமையான கால்பந்து தொடரான வான்டேஜ் எப்.ஏ. கிண்ண சுற்றுப் போட்டியின் இந்த வருடத்திற்கான அரையிறுதிப் போட்டிகள் எதிர்வரும் 25ஆம் திகதி சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன. இதில், குறித்த தினம் மாலை 5 மணிக்கு ஆரம்பமாகவிருக்கும் முதல் அரையிறுதியில் இலங்கை இராணுவ விளையாட்டுக் கழகம், பொலிஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்கொள்ளவிருப்பதோடு இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவிருக்கும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் சௌண்டர்ஸ் விளையாட்டுக் கழகம் கொழும்பு கால்பந்துக் கழகத்தை...