இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரை துணிச்சலுடன்  அணுகுமாறு இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோ ரூட் தனது அணி வீரர்களை கேட்டுக்கொண்டுள்ளார். நாங்கள் துணிச்சலுடன் இருக்கவேண்டும் சில விடயங்களை வித்தியாசமாக செய்யவேண்டும்,நாங்கள் தைரியத்தை வெளிப்படுத்தவேண்டும் சிறிது ஆபத்தான முயற்சிகளில் ஈடுபடவேண்டும் என ஜோ ரூட் தெரிவித்துள்ளார். நாங்கள் கடந்த காலங்களில் முயற்சி செய்யாத ஆபத்தான சில விடயங்களை முயன்றாலே இலங்கையில் வெற்றி சாத்தியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நான் அவ்வாறு விளையாடுவது குறித்து அச்சப்படவில்லை,எனது...
சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் பெண் ஒருவரை அடித்து கொலை செய்து சடலத்தை மண்ணால் மூடிச்சென்ற கொலையாளியை பொலிசார் தேடி வருகின்றனர். மெரினா கடற்கரை நீச்சல் குளம் அருகே காலை நடைபயிற்சி சென்ற நபர்கள் மணலில் பெண்ணின் உடல் இருப்பதையும், அந்த சடலம் மீது மணல் கொட்டப்பட்டு அரைகுரையாக மூடப்பட்டு இருந்ததையும் பார்த்துள்ளனர். இருப்பினும் அந்த பெண்ணின் மூக்கில் ரத்தம் வழிந்து கொண்டு இருந்தது. உடலெங்கும் காயங்கள், முகம் அதிகமாக தாக்கப்பட்டுள்ளது....
சிரியாவின் கிழக்குப் பகுதியில் ஐ.எஸ்.ஐ.எஸ்.தீவிரவாதிகள் மேற்கொண்ட கார் வெடிகுண்டுத் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் இந்த தாக்குதல் காரணமாக 20 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. சிரியாவில் பல்வேறு கிளர்ச்சியாளர்களுக்கும், அரசு படைகளுக்கும் இடையில் கடந்த 2011 ஆம் ஆண்டிலிருந்து மோதல் இடம்பெற்று வருகின்றது. கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவும், சிரிய அரசுக்கு ஆதரவாக ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளும் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஸ்கொட்லாந்து நாட்டில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 21 வயதான கல்லூரி மாணவி, தன்னை பொலிஸ் அதிகாரிகள் முன்னிலையில் நிர்வாணமாக நடக்கவிட்டதால் தற்கொலை செய்துகாண்டுள்ளார். Katie Allan என்ற கல்லூரி மாணவி ஏப்ரல் மாதம் குடிபோதையில் வாகனம் ஓட்டி, நபர் ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காக சிறை தண்டனை அனுபவித்து வந்துள்ளார். சிறையில் அடைக்கப்பட்ட நாள் முதல் மிகுந்த வேதனையில் இருந்துள்ளார். தெரியாமல் இந்த தவறை செய்துவிட்டதாக கூறிவந்தார். மேலும், இவருடன் இருந்த சக...
பிரித்தானியாவில் முதன்முறையாக வௌ்ளையினத்தவர் அல்லாத பெல்லட் நடன கலைஞர்களுக்காக கபில நிறம் மற்றும் அவர்களின் தோல் நிறத்திற்கு ஏற்றவகையிலான பாதணிகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இந்தவகையான பாதணிகள் அவர்களின் ஏனைய அணிகலன்களுடன் மிகவும் பொருந்துவதாக தெரிவித்துள்ளனர். பிரித்தானியாவின் பழைமை வாய்ந்த ‘ஃப்ரீட் ஒப் லண்டன்” நிறுவனத்தினரால் இந்த பாதணிகள் தயாரிக்கப்படுகின்றன. புதிய வகையான பாதணிகள் கபில நிறம், வெண்கல நிறம் மற்றும் பாரம்பரிய இளஞ்சிவப்பு நிறங்களில் கிடைக்கின்றன. குறித்த பெல்லட் நடன கலைஞர்கள்,...
அசிட் தாக்குதலில் காயமடைந்த உக்ரேனின் ஊழலுக்கு எதிரான செயற்பாட்டாளர் Kateryna Handzyuk (வயது-33) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடும் காயங்களுக்கு உள்ளாகி கடந்த மூன்று மாத காலமாக சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உயிரிழந்தார். உக்ரேனின் கெர்சொன் நகரசபை உறுப்பினராகவும் பதவி வகித்திருந்த Kateryna ஊழலுக்கு எதிரான பிரசாரங்களை மேற்கொண்டு வந்ததோடு, அவை தொடர்பான பதிவுகளை சமூக வலைத்தளங்களிலும் பதிவேற்றி வந்தார். இதனால் கடும் விமர்சனங்களுக்கும் உள்ளாகி வந்தார். இந்நிலையில்,...
இங்கிலாந்து கிரிக்கெட் அணித்தலைவர் இயான் மோர்கன், தனது நீண்ட கால தோழியான தாரா ரிட்ஜ்வே-ஐ திருமணம் செய்துள்ளார். இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் தலைவர் இயான் மோர்கன்(32), சமீபத்தில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-1 என்ற கணக்கில் வென்று கொடுத்தார். அத்துடன் அந்த தொடரில், இரண்டு அரைசதங்களுடன் 195 ஓட்டங்கள் குவித்தார். இந்நிலையில், மோர்கன் தனது நீண்டகால தோழியான தாரா ரிட்ஜ்வே-ஐ கடந்த வெள்ளிக்கிழமை திருமணம் செய்துகொண்டார். இவர்களின்...
ஜிம்பாப்வேயில் ஒரே பள்ளிக்கூடத்தை சேர்ந்த 16 மாணவிகள் கடந்த 10 மாதத்தில் கர்ப்பமாக ஆனதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. Chirumanzu மாவட்டத்தில் உள்ள ஓர்டன் டிரிவிட் இரண்டாம் நிலை பள்ளி மாணவிகள் தான் இதில் சிக்கியுள்ளனர். இது குறித்து தேசிய எய்ட்ஸ் கவுன்சிலின் ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், எங்களின் எச்.ஐ.வி தடுப்பு செயல்திட்டங்களுக்கு இடையூறாக இருப்பதில் டீன் ஏஜ் கர்ப்பங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஓர்டன் பள்ளியில் 16 மாணவிகள் கடந்த 10 மாத...
பாராளுமன்ற சுற்றுவட்டத்துக்கு அருகில் இன்று இடம்பெறவுள்ள ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனால் சாரதிகள் நண்பகல் 12 மணிக்கு பின்னர் மாற்று வீதிகளை பயன்டுத்துமாறு பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான றுவன் குணசேகர தெரிவித்தார். அத்துடன் நண்பகல் 12 மணிக்கு முன்னர் போக்குவரத்து நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்தார். அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவித்து இன்று இடம்பெறவுள்ள மக்கள் ஆர்ப்பாட்டத்துக்காக மேற்கொள்ளப்பட்டிருக்கும் விசேட...
சர்கார் டிக்கெட் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டது. இரண்டாவது நாள் டிக்கெட் கிடைப்பதே பலருக்கும் கடினமாக உள்ளது. இந்நிலையில் பிரபல நடிகர் ஆனந்த்ராஜ் சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் வேண்டுகோள் ஒன்று வைத்துள்ளார். அதில் "சர்கார் வெற்றிபெற வாழ்த்துக்கள். அதே நாளில் நான் நடித்துள்ள களவாணி மாப்பிள்ளை படமும் வருகிறது. சர்கார் படத்திற்க்கு டிக்கட் கிடைக்காதவர்கள் என் படத்தை பாருங்கள்." "சர்கார் படத்திற்கு டிக்கெட் கிடைக்காதவர்கள் களவாணி மாப்பிள்ளை படத்திற்கு வந்தால்கூட படம் வெற்றி...