ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை பேர­வையின் 39 ஆவது கூட்டத் தொடர்  ஜெனி­வாவில் நடை­பெற்­று­வ­ரு­கின்ற  நிலையில்  இலங்கை விவ­காரம் தொடர்பில் இன்று 24 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை  "பசு­மைத்­தா­யகம்" அமைப்­பினால்    உப­கு­ழுக்­ கூட்டம்  ஒன்று நடத்­தப்­ப­ட­வுள்­ளது. இலங்கை மனித உரிமை தொடர்­பான இந்த உப­கு­ழுக்­ கூட்டம் மனித உரி­மைப்­பே­ரவை வளா­கத்தில் 25 ஆம் இலக்க அறையில் பிற்பகல் 2 மணி­யி­லி­ருந்து  3 மணி­வரை  நடை­பெ­ற­வுள்­ளது. இந்த உப­கு­ழுக்­ கூட்­டங்­களில்  பாதிக்­கப்­பட்ட மக்­களின்...
நோட்டன் பிரிட்ஜ்  நிருபர் பௌர்ணமி தினத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மதுபான போத்தல்களுடன்ஒருவரை கைது செய்துள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவிதனர் அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்ட்ட. வெளிஓயா தோட்டத்திலே 24.09.2019 மதியம் வீடொன்றிலிருந்த 16 மதுபான போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளது பௌர்னமி தினத்தினை முன்னிட்டு அதிக விலைக்கு விற்பனை செய்ய வைதிருந்தபோதே மேற்படி போத்தல்கள் மீட்கப்பட்டதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டு 25.09.2018. அட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக அட்டன் பொலிஸார் தேரிவித்தனர்
இந்தோனேசியா நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் கடலில் சிக்கி 49 நாட்களாக கடல் நீரை குடித்து உயிர் வாழ்ந்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தோனேசியாவை சேர்ந்த Aldi Novel Adilang என்ற 19 வயது இளைஞர், வடக்கு சுலாவேசி கடற்கரை பகுதியிலிருந்து 125 கிமீ தூரத்தில் நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்துள்ளார். அவருடைய படகிலிருந்து ஒரு நீளமான கயிறானது கொக்கியில் உதவியுடன் கடலில் அடிப்பகுதியிலும் இணைக்கப்பட்டிருந்தது. இதனால் அங்கேயே தங்கி அந்த இளைஞர் மீன்...
  நோட்டன் பிரிட்ஜ் நிருபர் தோல்வியடைந்த கூட்டு ஒப்பந்தத்தை கைவிட்டு புதிய முறை பற்றி சிந்திப்போம் - அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுத்தார் திலகர் எம்பி கடந்த இருபத்தைந்து ஆண்டுகாலமாக நடைமுறையில் இருக்கும் கூட்டு ஒப்பந்தமுறையில் சம்பளத்தை அதிகரிக்க தொழிலாளர்கள் தொடர்ந்து போராடுகிறார்கள். கம்பனிகள் தொடர்ச்சியாக நட்டம் என காரணம் காட்டுகின்றன. பெருந்தோட்டத்துறை அமைச்சரோ முறையற்ற முகாமையினாலேயே தேயிலை தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன என்கிறார். இப்படி எல்லா தரப்பினராலும் தோல்வி முகத்தையே காட்டி நிற்கும் கூட்டு...
(டினேஸ்) புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சி ஏற்பாடு செய்திருந்த தியாக தீபம் திலீபனின் 31 ஆம் ஆண்டு நினைவு நாள் நினைவேந்தல் நிகழ்வு  எண்ணம்பாலப்பூவல் புதுமண்டபத்தடி பகுதியில் இன்று 23 ஆம் திகதி கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் நடராஜா ஜினேஸ் தலைமையில் நடைபெற்றது. இதன் முதற்கட்ட நிகழ்வானது குளிர்மான தாகசாந்தியுடன் ஆரம்பிக்கப்பட்டு அதன்பின்னர் தியாக தீபம் திலீபனின் திருவுருவ படத்திற்கு மாவீரரது தாயான எம்.யோகேஸ்வரி என்பவரினால் அகல்விளக்கேற்றி மலர்மாலை அணிவித்து...
  -மன்னார் நிருபர்-   (24-09-2018) மன்னார் வலயக்கல்வி அலுவலகத்தின் சாதனைகளுக்கு முக்கியமாக அமைகின்றது எழிமையும், தன்னடக்கத்தையும் தங்களுக்குள்ளே வழி காட்டியாகக் கொண்டு நாங்கள் எந்த நேரத்திலும் எந்த வேளையிலும் தடுமாறவும் மாட்டோம், தடம் மாறவும் மாட்டோம் என்ற அந்த உயரிய சிந்தனையுடன் ஒவ்வொறு பாடசாலைகளையும் ஆசிரியர் , அதிபர்களாகிய நீங்கள் வழி நடத்தி வந்துள்ளீர்கள் என மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி எஸ்.சுகந்தி செபஸ்தியன் தெரிவித்தார். மன்னார் வலயக்கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் புரட்டாதி முழு...
மஸ்கெலியா, ஹப்புகஸ்தென்ன பகுதியில் நீண்டகாலமாக இயங்கி வந்த சட்டவிரோத  கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றினை மஸ்கெலியா பொலிஸார்மேற்கொண்ட சுற்றி வளைப்பில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்துள்ளனர். குறித்த சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹப்புகஸ்தென்ன பகுதியில் சிவனொளிபாதமலை காட்டுப்பகுதியில் நீண்டகாலமாக இயங்கி வருவதாக கிடைத்த இரகசிய தகவலினையடுத்து விரைந்த பொலிஸார்  நேற்று முந்தினம் இரவு நிலையத்தினை சுற்றிவளைத்தனர். இதன்போது அங்கு கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த...
ஆசிய கிண்ண போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில், வங்கதேச அணி 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அபுதாபியில் நேற்று நடந்த ஆசிய கிண்ண தொடரின் சூப்பர்-4 ஆட்டத்தில் வங்கதேசம்-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற வங்கதேச அணி துடுப்பாட்டத்தை துவங்கியது. தொடக்க வீரர் லிடான் தாஸ் நிதானமாக 41 ஓட்டங்கள் எடுத்தார். அதன் பின்னர் வந்த மிதுன், நஸ்முல், ஷகிப் அல் ஹசன் ஆகியோர்...
இன்றைய பெண்கள் சரியான நேரத்தில் தேவையான சில மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வதின் மூலம் ஆரம்பத்திலேயே அவர்களுக்கு ஏற்பட கூடிய நோயை கண்டறிந்து அதற்குத் தகுந்த சிகிச்சையை வழங்கலாம். அப்படி பெண்கள் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு கீழ்யுள்ள இந்த 10 மருத்துவ பரிசோதனைகளை கட்டயாம் செய்துகொள்ள வேண்டும். உடல் எடை சரிபார்ப்பு ஒருவரின் உயரம், எடை ஆகிய இரண்டையும் வைத்து அவரது பாலினம் மற்றும் வயதின் அடிப்படையில் உடலின் பிஎம்ஐ கணக்கிடப்பட்டு உடலில்...
யாழ். இந்துக் கல்லூரியில் இரத்ததான முகாம் மேற்கொள்ளப்பட்ட போது ஆயுதத்துடன் புகுந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். தியாக தீபம் திலீபனின் நினைவு நாளையொட்டி யாழ். இந்துக் கல்லூரி மாணவர்களால் இன்று இரத்ததான முகாமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது இரத்ததான முகாம் நடத்தப்பட்ட இடத்திற்கு வந்த நபரொருவர் தனது இடுப்பில் இருந்த துப்பாக்கியினை எடுத்து தன்னுடன் வந்த மற்றொரு நபரிடம் கொடுத்துள்ளார். இந்த நிலையில் குறித்த சம்பவத்தால் இரத்ததானம்...