முஸ்லிம்களுக்கு நானே நூற்றுக் கணக்கான ஆயுதம் வழங்கினேன்,இந்து கோவில்களை நானே அழித்தேன்' - ஓட்டமாவடி தமிழர்களின் சுடலையையும் சுருட்டினேன் ஒப்புக்கொள்கிறார்  முஸ்லிம் அமைசசர் ஹிஸ்புல்லா, இவர் மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவராக செயல்ப் பட்ட காலங்களில் இவரால் முன்னெடுக்கப்பட்ட அனைத்து செயல்த்திட்டங்களையும் நீதிமன்றில் இடைக் கால தடை பெற்று மீள் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் இதற்க்கு ஆதாரமாக இவரால் வாக்கு மூலம் கொடுக்கப்பட்ட veedio சான்றே போதும். தனது அதிகாரத்தை...
யாழ்ப்பாணம் செம்மணிப் படுகொலையின் 22 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று நடைபெற்றது. செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மாணவி குமாரசாமி கிரிசாந்திக்கு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. கிரிசாந்தியுடன் படுகொலை செய்யப்பட்ட ஏனைய மூன்று பேர் உட்பட,படுகொலை செய்யப்பட்டு செம்மணியில் புதைக்கபட்டவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர். இதில்  ஆரம்ப  பிரிவு மாணவர்கள்  பலருக்கு  கற்றல் உபகாரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன. இந் நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், கிரிசாந்தினயின் உறவினர்கள், அயலவர்கள் மற்றும் வடக்கு மாகாண...
மனிதர்களின் தலைக்குள் சுரங்கங்கள் போன்ற அமைப்பு உள்ளதென்பதை உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் இது தற்போது மருத்துவ ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட உண்மை. ஆம், எலிகள் மற்றும் மனிதர்களின் தலைப்பகுதியினுள் மூளையினையும், மண்டையோட்டு என்பு மச்சைகளையும் இணைக்கும் கால்வாய்கள் காணப்படுவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவை மூளைக்கான நோயெதிர்ப்புக் கலங்களை வழங்கும் பாதை என ஆய்வாளர்கள் நம்புகின்றனர். இதன் காரணமாக மூளை தாக்கத்திற்கு உள்ளாகும்போது இவ் நோயெதிர்ப்புக் கலங்கள் என்பு மச்சையிலிருந்து நேரடியாக மூளைக்கு விநியோகிக்கப்படலாம் என்பது அவர்களது...
பொதுவாகவே, மணி பிளான்ட்டை வளர்ப்பதால் வீட்டில் செல்வம் பெருகும். கடன் தொல்லை தீரும் என்ற நம்பிக்கை நமது மக்களின் மத்தியில் இருந்து வருகிறது. ஆனால் சிலருக்கு இந்த செடியை எப்படி வளர்க்க வேண்டும் என்று தெரிவதில்லை. மணி பிளான்ட் வீட்டில் வளர்க்க விரும்புவோர் அதை சரியான திசையில் வளர்க்க என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம். வைக்க வேண்டிய திசை வாஸ்து நிபுணர்கள் மணி பிளான்ட்டை தென்கிழக்கு திசை நோக்கி தான்...
பொலன்னறுவை - வெலிகந்தை, குடாஓயா பிரதேசத்திலுள்ள காட்டுப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ள நபரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர். இந்த சடலத்தை இன்று காலை தாம் மீட்டதாக வெலிகந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். அசேலபுர பிரதேசத்தை சேர்ந்த 61 வயதான என்.பி.பியரத்ன என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். குறித்த நபர், மூன்று தினங்களுக்கு முன்னர் காணாமல்போனதாக அவரின் மகன் வெலிகந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து குடாஓயா...
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் அலெஸ்டர் குக்கை, 4-1 என்ற வெற்றி கணக்கில் வழியனுப்புவதே சிறப்பாக இருக்கும் என அந்த அணித்தலைவர் ஜோ ரூட் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று லண்டன் ஓவலில் தொடங்க உள்ளது. இங்கிலாந்து ஏற்கனவே 3-1 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ள நிலையில், கடைசி போட்டியையும் வெல்லும் முனைப்புடன் உள்ளது. மேலும், இங்கிலாந்து அணியின் முன்னாள் அணித்தலைவர் அலெஸ்டர் குக்...
அதிக நேரம் அல்லது குறுகிய நேரம் நித்திரை கொள்வதென்பது புகைபிடித்தலால் உருவாகும் அபாய விளைவுகளுக்கு நிகரான விளைவுகளை தரக்கூடும் என ஆய்வொன்று எடுத்துக்காட்டுகின்றது. சுவீடனைச் சேர்ந்த ஆய்வாளர்கள் குழு 1,463 பேரில் மேற்கொண்டிருந்த ஆய்வொன்றிலேயே இது தெரியவந்துள்ளது. இது பற்றி ஆய்வாளர் Moa Bengtsson கூறுகையில், "ஓய்வில்லாமல் உழைப்பவர்கள் அதிக நேரம் நித்திரை கொள்வதென்பது தமது நேரத்தை வீணடிப்பதாக எண்ணிக் கொள்கின்றனர். ஆனால் இது பிற்காலத்தில் இதயம் சார்ந்த நோய்களை ஏற்படுத்தக்கூடும்"...
வடக்கு - கிழக்கு மாகாணங்களில் 40 ஆயிரம் வீடுகளை அமைக்கும் பணிகள் சீன நிறுவனத்திடமிருந்து மீளப் பெறப்பட்டு, இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கொழும்பில் நேற்று இடம்பெற்ற உயர்மட்ட கலந்துரையாடலிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பில் இந்திய அரசுடன் விரைவில் பேச்சு இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 40 ஆயிரம் வீடுகளை அமைக்கும் பணிகளை சீன நிறுவனம் முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டிருந்தது. எனினும்...
யாழ்.சுழிபுரம்- சவுக்கடி கடற்கரையில் மீனவர்களின் இறால் பிடிப்பதற்கான கூட்டுக்குள் சருகு புலி ஒன்று சிக்கியுள்ளது. குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, சவுக்கடி கடற்கரையில் மீனவர்கள் இறால் பிடிப்பதற்கான கூடுகளை வைப்பது வழக்கம். இவ்வாறு நேற்று மாலை கூடுகளை வைத்துவிட்டு சென்ற மீனவர்கள் இன்று காலை திரும்பவும் கடற்கரைக்கு வந்தபோது இறால் கூட்டுக்குள் சருகு புலி ஒன்றை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனையடுத்து பொலிஸாரின் ஒத்துழைப்புடன் வனஜீவராசிகள் திணைக்களத்திடம்...
யாழில் ஹெரொயின் போதை பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையிலையே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 282 மில்லிக்கிராம் ஹெரோயின் போதை பொருளினை மீட்டுள்ளதாகவும்,கைது செய்யப்பட்டவர்கள் 24 மற்றும் 27 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன் கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகளை யாழ் பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.