நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2004ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்ட ஜோடி தனுஷ் - ஐஸ்வர்யா.
இந்த தம்பதிக்கு யாத்ரா - லிங்கா என இரு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு தங்களுடைய பிரிவை அறிவித்தனர். இவர்களுடைய பிரிவு செய்தி அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. ஆனால், விவாகரத்து கேட்டு நீதி மன்றத்தை இதுவரை இவர்கள் அணுகவில்லை.
இந்த...
வெளிவந்து 25 வருடங்கள் ஆகும் இண்டஸ்ட்ரி ஹிட் படையப்பா படத்தின் மொத்த வசூல்.. இதோ பாருங்க
Thinappuyal News -
கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து 1999ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் படையப்பா. இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், லட்சுமி, அப்பாஸ், நாசர், மணிவண்ணன், ரமேஷ் கண்ணா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இவர்கள் அனைவரையும் தாண்டி நடிகர் திலகன் சிவாஜி கணேசன் இப்படத்தில் ரஜினியின் தந்தையாக நடித்து பட்டையை கிளப்பி இருப்பார். அதுவும் தன்னுடைய வீட்டை விட்டு வெளியே வரும் காட்சிகளில் எல்லாம் அவரை தவிர வேறு...
சீரியல் நடிகை மகாலட்சுமியை விவாகரத்து செய்கிறாரா தயாரிப்பாளர் ரவீந்தர்- சோகமான பதிவு
Thinappuyal News -
பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமி அவரது சொந்த வாழ்க்கையில் நடந்த முக்கியமான விஷயத்தால் மிகவும் பிரபலமானார்.
முதல் கணவரை விவாகரத்து செய்தபின் தனியாக வாழ்ந்து வந்த மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்திரனை திருமணம் செய்துகொண்டார்.
எந்த ஒரு கிசுகிசுவிலும் சிக்காமல் திடீரென திருமண புகைப்படங்களை இந்த ஜோடி வெளியிட ரசிகர்கள் அனைவருமே ஷாக் ஆனார்கள். அதன்பிறகு இவர்கள் மிகவும் பிரபலமாக ரசிகர்களால் பேசப்பட்டார்கள்.
சந்தோஷமாக இவர்கள் வாழ்ந்து வந்த நேரத்தில் தான் ரவீந்தர் மீது...
பரீஸில் அடுக்குமாடிக் தீ விபத்தில் 3 பேர் மூவர் உயிரிழப்பு பிரான்ஸின் தலைநகரான பரீஸில் அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் இன்று (8) இடம்பெற்ற தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
அடுக்குமாடி குடியிருப்பின் 7வது தளத்திலேயே இத் தீ விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், இதில் 3 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவலறிந்து து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படையினர் தீயை முற்றுமுழுதாக அணைத்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டள்ளது.
சமையல் எரிவாயு கசிவு...
பிரித்தானியாவை சேர்ந்த 111 வயது முதியவரான ஜான் ஆல்பிரட் டின்னிஸ்உட் என்பவர் இப்போது உலகின் மிக வயதான மனிதராக கின்னஸ் சாதனையில் இடம் பெற்றுள்ளார்.
சமீபத்தில் உலகின் மிக வயதான மனிதர் என்ற பெருமையை வெனிசுலாவை சேர்ந்த 114 வயதான ஜூவான் விசென்டே பெரேஸ் மோரா உயிரிழந்தார்.
இவ்வாறான நிலையில் ஜான் ஆல்பிரட் டின்னிஸ்உட் தனது நீண்ட ஆயுளின் ரகசியத்தை யூடியூப்பில் பகிர்ந்துள்ளார்.
அதில் நீண்ட ஆயுளுக்காக உணவு ரகசியங்கள் என்று எந்த...
ரஷ்யாவில் உள்ள அணுமின் நிலையம் மீது குறி வைத்து ட்ரோன் மூலம் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்பட்டன. ரஷ்யா சரியான நேரத்தில் பதிலடி கொடுத்ததால், பெரும் அசம்பாவிதம் தடுத்து நிறுத்தப்பட்டது. ஐ.நா.அதிகாரிகளும் இந்த தாக்குதலை கண்டித்துள்ளனர்.
ரஷ்யாவில் உள்ள ஜபோரிஜியா அணுமின் நிலையம் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஐரோப்பாவின் இந்த மிகப் பெரிய அணுமின் நிலையம் துவக்கத்தில் உக்ரைன் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. ஆனால், கடந்த 2022ம் ஆண்டு போர் துவங்கிய...
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் வானிலை மற்றும் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறித்த நிலநடுக்கமானது பப்புவா மாகாணத்தில் இன்றையதினம் (09-04-2024) காலை 7 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவானதாகவும், பனிச்சரிவு எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பப்புவா மாகாணத்தின் ரான்சிகி நகரை மையமாக கொண்டு 11 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை அடியோடு ஒழிப்பதாக இஸ்ரேல் சூளுரைத்து காசா மீது போரை தொடங்கி கடந்த 6 மாதங்களாக தாக்குதலை மேற்கொண்டு வருகின்றது.
இவ்வாறான நிலையில் ரபா நகரை ஹமாஸ் அமைப்பின் கடைசி கோட்டையாக கருதும் இஸ்ரேல் அங்கு தனது தரைப்படையை அனுப்பி அந்த நகரை ஆக்கிரமிக்க தீவிர முனைப்பு காட்டி வருகிறது.
காசாவின் ரபா நகருக்குள் தரைப்படையை அனுப்பி அந்த நகரை ஆக்கிரமிப்பது உறுதி என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின்...
பிள்ளைகளை வீதியில் விட்டுவிட்டு மோசமான செயலில் ஈடுபட்ட தாய்மார்! கனடாவில் சம்பவம்
Thinappuyal News -
கனடாவில் பிள்ளைகளை வீதியில் விட்டுவிட்டு கசினோ விளையாடியதாக இரண்டு தாய்மாருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இரண்டு, ஒன்பது மற்றும் பத்து வயதான சிறார்களே இவ்வாறு கைவிடப்பட்டிருந்தனர் என தெரிவிக்கப்படுகின்றது.
பெரியவர்களின் மேற்பார்வையின்றி குறித்த மூன்று சிறார்களும் கசினோ விளையாடும் மையத்தின் வாகனத் தரிப்பிடத்தில் விளைடியாடிக் கொண்டிருந்தனர் என தெரிவிக்கப்படுகின்றது.
பிள்ளைகளை நிர்க்கதியாக விட்டு விட்டு கசினோ சூதாட்டத்தில் ஈடுபட்ட இரண்டு பெண்களுக்கு எதிராகவும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக டர்ஹம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சிறுவர்கள் சுமார்...
கனடாவில் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்… இருவர் உயிரிழப்பு! ஒருவர் வைத்தியசாலையில்
Thinappuyal News -
கனடாவில் எட்மண்டன் பகுதியில் கவநாக் போல்வார்டு என்ற இடத்தில் கூடியிருந்த மக்களை நோக்கி இனந்தெரியாத நபரொருவர் துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளார்.
இச்சம்பவத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே காயமடைந்து விழுந்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் தகவலறிந்து தென்மேற்கு பிரிவின் ரோந்து பொலிஸார் உடனடியாக சம்பவ பகுதிக்கு சென்றுள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்து கிடந்த 3 ஆண்களை மீட்ட நிலையில் அவர்களில் 49 மற்றும் 57 வயதுடைய 2 பேர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏறக்குறைய 50 பேர்...