நைஜீரியாவில் பிடா மாகாணத்தை சேர்ந்தவர் முகமது பெல்லோ அபுபக்கர். இவருக்கு 92 வயது ஆகிறது. மத குருவாக இருக்கிறார். இவருக்கு ஏற்கனவே 107 பெண்களுடன் திருமணம் நடந்துள்ளது.
அவர்களில் 10 பேரை விவாகரத்து செய்துவிட்டார். மீதமுள்ள 97 பெண்களுடன் குடும்ப வாழ்க்கை நடத்தி வருகிறார். இவருக்கு 185 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் அவர் இறந்து விட்டதாக வதந்தி பரவியது.
ஆனால் இதை அவர் மறுத்துள்ளார். திடீரென வீடியோவில் தோன்றிய அவர் தான்...
ஏறாவூர் தாய் மகளை கொன்ற 6 சந்தேகநபர்களையும், மேலும் எதிர்வரும் நவம்பர் மாதம் 02ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Thinappuyal -
கடந்த செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி, ஏறாவூரில் தாயும் மகளும் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாகக் கைதுசெய்யப்பட்டு, இன்று 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 6 சந்தேகநபர்களையும், மேலும் எதிர்வரும் நவம்பர் மாதம் 02ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலதிக நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமாகிய எம்.ஐ.எம். றிஷ்வி முன்னிலையில் மட்டக்களப்புச் சிறைச்சாலை அதிகாரிகளால் இந்தச் சந்தேகநபர்கள் அறுவரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது நீதிமன்ற...
தேசிய மட்ட 21 வயதிற்குட்பட்டவர்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ள வவுனியா வடக்கு கனகராயன்குளம் மகாவித்தியாலய மாணவி நாகராசா ரிலக்சினியை கௌரவிக்கும் நிகழ்வு, இன்று (புதன்கிழமை) வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.
பாடசாலை சமூகமும் பெற்றோரும் இணைந்து, குறித்த மாணவியை கனகராயன்குளம் ஆரம்ப பாடசாலையில் இருந்து ஏ9 வீதி வழியாக வாகனத்தில் ஏற்றி, பாண்ட் வாத்திய இசை முழங்க மாணவர்களின் கரகோசத்துடன் கனகராயன்குளம் மகாவித்தியாலயத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அதனையடுத்து,...
யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தியில் இரண்டு பேரூந்துகள் போட்டிக்கு ஓடியபோது ஏற்பட்ட விபத்தில் சிறுவன் ஒருவர் மரணமடைந்த சம்பவம் மன்னிக்க முடியாத பாவச் செயல் என யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். இத்தகைய விபத்து மரணங்கள் ஏற்படாத வண்ணம் பேரூந்து சாரதிகளுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
திருநெல்வேலி சந்தியில் ஒன்றையொன்று முந்திச் செல்வதற்காக இரண்டு பேரூந்துகள் போட்டிக்கு வேகமாக ஓடியபோது, எதிரில்...
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 16 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Thinappuyal -
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 16 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுட்டிக்கப்படுகின்றது.
இதற்கமைய இன்று யாழ்ப்பாணத்திலுள்ள அவரது நினைவு தூபிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அவரது படுகொலைக்கான நீதியை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – ஏ9 வீதியிலுள்ள மாநகர சபைக்கு முன்னால் உள்ள விளையாட்டு அரங்கில் அமைந்துள்ள சிரேஷ்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் நினைவு தூபிக்கு ஊடகவியலாளர்கள் மலர் அஞ்சலி செலுத்தி நினைவு கூர்ந்துள்ளனர்.
இந்த நிகழ்வில்...
முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனும் பிள்ளையானின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கவின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் எதிர்வரும் 2 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு நீதவான் கனேசராஜாவின் உத்தரவிற்கமைய பிள்ளையானது விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
ஆட்டுப்பட்டித் தெரு, கன்னாரத் தெரு வில் தங்க நகை செய்யும் இடமொன்றில் இடம்பெற்ற சுமார் மூன்றரைக் கோடி ரூபா பெறுமதியான பணம் மற்றும் நகைக் கொள்ளையின் பிரதான சூத்திரதாரி செட்டி யார் தெரு தங்கநகை வர்த்தகர் ஒருவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேற்படி கொள்ளை தொடர்பில் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு கடந்த சனியன்று நால்வரை கைது செய்த நிலையில் அவர்களிடம் முன்னெடுத்த விசாரணைகளிலேயே இந்த தகவல் தெரியவந்துள்ளது. எனினும்...
கடந்த இரு வாரங்களாக கோலிவுட், பாலிவுட், மாலுவுட், ஹாலிவுட் வரை பிரபு தேவா, தமன்னா பற்றித்தான் சூடான விவாதங்கள். அந்த மனுஷனுக்கு மட்டும் எப்படியா லட்டு லட்டா வந்து மாட்டுது. என்கிற ரேஞ்சுக்கு காதில் புகை வர பேசுகிறார்கள் சினிமா புள்ளிகள்.
திருமணம் உறுதியாகிவிட்டது என்கிறார்கள். இந்த விஷயத்தில் அதிகமாகவே பாதிக்கப் பட்டது நயன் தானாம்.
கொதித்துப் போய் தமன்னாவை நேரிடையாகவே தொடர்பு கொண்டு அத்தனை விஷயங்களையும் கண்ணீரோடு போட்டு உடைத்தாராம்.
லூசாடி...
18 மாத நிலுவைப் பணத்தை முதலாளிமார் சம்மேளனம் வழங்கவேண்டும் எனக் கோரி மலையகத்தில் பல பகுதிகளிலும் தொழிலாளர்கள் வீதிகளை மறித்தும், ஆலயங்களில் தேங்காய் உடைத்தும் 19.10.2016 இன்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
கடந்த வருடம் மார்ச் 31ஆம் திகதியுடன் நிறைவடைந்த கூட்டு உடன்படிக்கையானது 18 மாதங்களாக பல சுற்றுகள் பேச்சுவார்த்தை நடைபெற்று நேற்று 18.10.2016 முதலாளிமார் சம்மேளனமும் கூட்டு உடன்படிக்கை தொழிற்சங்கங்களும் கைச்சாத்திட்டது.
2016 தொடக்கம் 2018 வரையிலான காலத்திற்கு ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையில்...
தாம் எதிர்பார்த்ததை போன்று கோத்தாவின் போர் என்ற நூல் பிரபலமடையவில்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ச கவலை வெளியிட்டுள்ளார்.
இதனால் தாம் ஏமாற்றமடைந்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
உலகில் யுத்தக்கால நிகழ்வுகள் தொடர்பாக எழுதப்பட்ட நூல்கள் பல பிரபலமடைந்துள்ளன. அவற்றைப் போன்று தனது நூலும் பிரபலமடையும் என எதிர்பார்த்திருந்தேன்.
இதனைகொண்டே கோத்தாவின் போர் என்ற நூலும் வெளியிடப்பட்டது. எனினும், துரதிஷ்டவசமாக அந்த நூல்...