அமெரிக்காவை சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் மில்லியன் சொத்துக்களுக்கு சொந்தக்காரரான வயது முதிர்ந்த நபரை திருமணம் செய்துகொண்டார். இணையதளம் ஒன்றின் வாயிலாக 68 வயது முதியவருடன் இப்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கத்தின் மூலம், நாளடைவில் அந்த முதியவர் மீது இந்த பெண்ணுக்கு ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டைதையடுத்து, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்தது. ஆனால், அந்த திருமணத்தின் மூலம் இப்பெண்ணுக்கு எவ்வித சந்தோஷமும் இல்லை....
1) ஒரு வெள்ளைத்தாளில் ஒரு துளி தேனை விடுங்கள், அந்த தேனை, தேன் ஊற்ற‍ப்பட்ட‍ காகிதம் உறிஞ்சாமலும், மேற்கொண்டு அந்த வெள்ளைத் தாளில் பரவாமலும் இருந்தால், அது அசல் தேன் என்பதை அறியலாம். ஒரு வேளை, அந்த காகிதம், அந்த ஒரு துளி தேனை உறிஞ்சினாலோ அல்ல‍து பரவ விட்டாலோ அந்த தேன் கலப்படத் தேன் என்பதை அறியலாம். 2) ஒரு டம்ளர் நிறைய‌ தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில்...
தோட்டத் தொழிலாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நியாயமான சம்பள உயர்வுக்கான போராட்டத்துக்கு தொழிலாளர் தேசிய சங்கம் தனது இதய சுத்தியுடனான ஆதரவினை வழங்கி வருவதாக மத்திய மாகாண சபை உறுப்பினரும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். தோட்டத் தொழிலாளர்களின் வேதன உயர்வு மற்றும் தொழிலாளர்களின் நியாயாமான சம்பளத்துக்கான போராட்டம் தொடர்பாக தோட்டத் தலைவர் மற்றும் தோட்டத் தலைவிமார்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டமொன்று ஹட்டன் டீ.கே.டபிள்யூ மண்டபத்தில்...
தனது மகள் ஆராத்யாவால் படப்பிடிப்பு நின்று போனதாக நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யா ஓரளவுக்கு வளரும் வரை படங்களில் நடிக்காமல் இருந்தார். அதன் பிறகு நடிக்க வந்தாலும் மகளையும் படப்பிடிப்பு தளங்களுக்கு அழைத்துச் சென்றார். இந்நிலையில் ஆராத்யா பற்றி ஐஸ்வர்யா கூறுகையில், ஒரு நாள் படப்பிடிப்பில் நான் அழுவது போன்ற காட்சியை படமாக்கினார்கள். நான் படத்திற்காக அழுது நடித்ததை பார்த்த...
இளமை இதோ இதோ... என்னடா இது சினிமா பாட்டா இருக்குதுனு யோசிக்கிறீங்களா?... ஆமாங்க ஒரு முதியவர் செய்யும் செயல் நம்மை இவ்வாறு பாட்டிசைக்க வைக்கிறது. வயதான முதியவர் ஒருவர் கைத்தடியை தூக்கி எறிந்துவிட்டு கூட்டத்தில் தன்னை மறந்து உற்சாகமாக நடனமாடுகிறார். இன்றைக்கு ஃபேக்புக்கில் அதிகமாக பார்க்கபட்ட வீடியோ பட்டியலில் இந்த தாத்தாவின் நடன வீடியோவும் ஒன்று. உங்களுக்கு அந்த இளமை ததும்பும் தாத்தாவின் நடனக் காட்சி...  
நம் எல்லோரையுமே திரும்பிப்பார்க்க வைக்கும் ஒரே விஷயம் அழகுதான். எவ்வளவுதான் பழக்கப்பட்ட நபராக இருந்தாலும் கூட அவருடைய அழகான உடையோ அல்லது விசேஷமான அம்சங்களோ நம்மை திரும்பிப்பார்க்க வைக்கின்றன. இதனால் தான் நாமும் அழகுடன் வலம் வரவிரும்புகின்றோம். அதே போல நம்முடைய வாகனம், வீடு உள்ளிட்டவற்றையும் அழகுபடுத்த முயற்சிக்கின்றோம். இந்த முயற்சியில் வீடு அழகு படுத்தல் என்பது உண்மையிலேயே ஓர் கலையே. சிலர் வீட்டை மாதத்துக்கு ஒரு முறை மாற்றியமைப்பார்கள்....
அலைபேசி முதற்கொண்டு அனைத்தும் ஸ்மார்ட் ஆகி வருகின்ற அந்த வரிசையில் சுவர் கடிகாரம் தற்போது இடம்பிடித்துள்ளது. இந்த ஸ்மார்ட் சுவர் கடிகாரத்திற்கு ‘க்லான்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் சுவர் கடிகாரத்தை வீட்டில் உள்ள அனைத்து ஸ்மார்ட் கருவிகளுடன் நம்மால் இணைக்க முடியும். இதன் மூலம் நம்முடைய அன்றாட வேலைகள் மேலும் சுலபமாகும் என்று இதன் வடிவமைப்பாளர்கள் கூறுகின்றனர். ‘க்லான்ஸ்’ ஸ்மார்ட் கடிகாரத்தின் விலை 199 அமெரிக்க டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாம்...
இதில் உள்ள நீர்ச்சத்து, சருமத்தை மென்மையாக்கும். கத்திரிக்காயில் வைட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து உள்ளது. கத்திரிக்காய் நரம்புகளுக்கு வலுவூட்டவும், சளி, இருமலைக் குறைக்கவும் செய்கிறது. முதல்கட்ட சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் வல்லமை பெற்றது. வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பானகுரல், உடல் பருமன் முதலியவற்றைக் குணப்படுத்தும் காய்கறிகளுள் கத்தரிக்காயும் குறிப்பிடத்தக்கது. போட்டோ நியூட்ரியெண்ட்ஸ் இருப்பதால் நினைவாற்றல் அதிகரிக்கும். இதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் கொழுப்பைக் கரைக்கும்....
  சிறீரெலோ இளைஞர் ஒன்றியத்தினால் முன்பள்ளி மாணவர்கட்கு பரிசுகள் வழங்கி வைப்பு(படங்கள்) Oct 3, 2016 சிறீரெலோ இளைஞர் ஒன்றியத்தினால் முன்பள்ளி மாணவர்கட்கு பரிசுகள் வழங்கி வைப்பு(படங்கள்)2016-10-03T20:26:42+00:00 No Comment சிறீ தமிழீழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் ஒன்றியத்தினால் சிறுவர்தினத்தை முன்னிட்டு இன்று (03.10.2016) கோமரசங்குளம் முன்பள்ளி  வலயத்தினுள் உள்ள முன்பள்ளிகளை சேர்ந்த 150 சிறார்களுக்கான பரிசுப் பொதிகள் வழங்கி வைப்பு இந்நிகழ்வானது இன்று காலை 10.30 மணியளவில் கோமரசங்குளம்...
  இராணுவ சேவையிலிருந்து ஓய்வுபெற்றுள்ள- போர்க்குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள மேஜர் ஜெனரல் சுமேதா பெரேராவை அரசியலில் களமிறக்குவதற்குரிய முயற்சியில் மஹிந்த அணி இறங்கியுள்ளது என அறியமுடிகின்றது. இலங்கை இராணுவத்தில் உள்ள முக்கிய ஆறு இராணுவ தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் சுமேதா கடந்த வெள்ளியுடன் (30) இராணுவ சேவையிலிருந்து ஓய்வுபெற்றார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள்   பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருடன் இவர் நெருக்கமான தொடர்பை வைத்திருந்தவர். சர்வதேச சமூகத்தினால் யுத்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட...