சரியான உடலமைப்புடன் காட்சியளிக்க, பெண்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வார்கள். அனைத்து பெண்களும் தற்போது அழகிய வளைந்த இடையை பெறும் பல வழிகளை பற்றி யோசிக்க தொடங்கியிருக்கிறார்கள்.
அவற்றில் ஒன்று தான் சுலபமாக கிடைக்கக்கூடிய சில டயட் உணவுகள். இவைகளை நீங்கள் உண்ணும் போது இரண்டு வார காலத்திற்குள் உங்களால் நல்ல பலனை காண முடியும்.
வெண்ணெய் பழம்
நார்ச்சத்து அதிகமாகவும் கார்போஹைட்ரோட்ஸ் குறைவாகவும் உள்ள சிறந்த உணவுகளில் ஒன்றான வெண்ணெய் பழத்தை...
ரெமோ படத்தில் சிவகார்த்திகேயன் அணிந்திருக்கும் மர்லின் மன்றோ ஸ்கர்ட் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ஆண், பெண் என இருவேடங்களில் சிவகார்த்திகேயன் நடித்திருப்பதால், இவரின் ஆடை பல்வேறு டிசைன்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது என்கிறார் ஆடை வடிவமைப்பாளர் அனு பார்த்தசாரதி.
செவிலியர் ஆடைகளில் பொருத்தப்பட்டுள்ள பட்டன்கள், மற்றும் பெண்கள் விரும்பி அணியும் அணிகலன்கள் ஆகியவை இந்த ஆடைக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன.
இவர் அணிந்துள்ள மெர்லின் மன்றோவின் ஸ்கர்ட், இன்றைய இளம் பெண்கள் மத்தியில் தற்போது பிரபலமாகியுள்ள நிலையில்,...
மடுல்சீமை பிரதேசத்தில் 11 வயது மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது வீட்டுக்கு பின்னால் உள்ள மரம் ஒன்றில் குறித்த மாணவி நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மாணவியின் தந்தை மத்திய கிழக்கு நாடொன்றில் பணி புரிவதாகவும், தாய் ஒரு ஆசிரியை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் இதுவரை வெளிவரவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, வவுனியா ஏழாம்...
வவுனியா பிரதேச சிவில் பாதுகாப்பு குழு கூட்டங்கள் பயனற்றுப்போவதாக சமூக ஆர்வலர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் அவர்கள் தெரிவிக்கையில்,
வவுனியா பிரதேச செயலகத்தில் ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமைகளில் சிவில் பாதுகாப்புகுழு கூட்டம் இடம்பெற்று வருகின்றது.
ஆரம்ப நாட்களில் பயனுள்ள செயற்பாடுகளை இதனூடாக முன்னெடுக்க கூடியதாக இருந்தது.
குறிப்பாக பிரதேச செயலாளர், நகரசபை செயலாளர், பொலிஸ் உயரதிகாரிகள் என பலரும் இதில் கலந்து கொள்வதனால் பல சமூக விடயங்கள் தொடர்பாக தீர்வுகள் காணப்பட்டு...
பாடங்களை இலகுவாக கற்க பல வழிகள் உள்ளன. ஆனால் எமக்கு இலகுவான முறையிலும் மற்றும் எம்மால் அதிக பயனைப்பெற்றுக்கொள்ளக் கூடிய வழி என்னவென்று கண்டுபிடித்தல் அவசியமாகும்.
ஆசிரியர் கற்பிக்கும் போது பாடங்கள் விளங்காவிடிலும் கூட அவர் கூறும் விடயங்களை அவதானித்தல் அவசியமாகும். ஆசிரியரால் கூறப்படும் விடயங்களை கிரகிக்காவிட்டாலும் அவதானித்தல் என்பது மிக முக்கியமாகும். அவ்வாறு அவதானிப்பதன் மூலம் சில விடயங்கள் எந்த வித சிரமமும் இன்றி மனதில் எளிதாக பதியும்.
இதன்...
சுவிஸ் நாட்டின் சமஷ்டி சபை உறுப்பினர் சிமோனிற்றா சோமறுக தலமையிலான குழுவினர் வடமாகாண முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
குறித்த சந்திப்பு இன்று காலை 10 மணிக்கு வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த சந்திப்பின் போது சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வு கிடைக்கவேண்டும். என வலியுறுத்தியிருக்கும் முதலமைச்சர் சமஷ்டி தொடர்பாக தென்னிலங்கை சமூகம் தவறான பார்வையினை கொண்டிருக்கும் நிலையில் அதனை சர்வதேச சமூகம் தெளிவுபடுத்த வேண்டும் என முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் சுவிஸ்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகளான சத்துரிக்கா சிறிசேன, மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளுடன் பொலன்நறுவை மாவட்ட மக்களின் குறைகளை ஆராய்ந்து அதற்கு தீர்வு வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தார்.
இதன்போது ஜனாதிபதியின் கீழ் மகாவலி அமைச்சின் அதிகாரிகளை இணைத்துக் கொண்டு பொலன்நறுவை, வெலிகந்த, மகாவலி பகுதி மக்களின் பிரச்சினைகளுக்கு...
புலிகளுக்கு எதிராக கூட வீதியில் இறங்கிப் போராடாத வவுனியா சிங்கள மக்களை தற்போது வீதியில் இறக்கிப் போராடுவது இனவாதத்தின் உச்சநிலையே என வடமாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் தெரிவித்துள்ளார்.
பொதுபலசேனாவால் வவுனியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில் இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
புலிகள் இருக்கும் வரை புலிகளுக்கு எதிராகவோ, தமிழ் அரசியல் தலைவர்களுக்கு எதிராகவோ வீதியில் இறங்கி போராடாத வவுனியா சிங்கள மக்கள் இன்று...
மாரடைப்பு காரணமாக உயிரிழந்த வடமாகாணசபை பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதனுக்கு எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா சம்மந்தன் உள்ளிட்ட அதிதிகள் அஞ்சலி செலுத்தினர்.
இன்று காலை வேளையிலே எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா சம்மந்தன் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவப்பிரகாசம் சிவமோகன், சிவசக்தி ஆனந்தன் திருமதி சாந்தி சிறீஸ்கந்தராஜா மற்றும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு கே.துரைரட்ணம் உள்ளிட்ட அதிதிகள் பலர்...
வென்னப்புவ – வைக்கால பகுதியில் வங்கியொன்றில் கொள்ளையிட முற்பட்டதாக கூறப்படும் வங்கியின் முகாமையாளர் உட்பட நால்வரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கடந்த செப்டம்பர் மாதம் 15 மற்றும் 19 ஆம் திகதிகளில் வங்கியினுள் நுளைந்து சிலர் திருட முற்பட்டுள்ளதாக வங்கியின் முகாமையாளர் கொடுத்த முறைப்பாட்டுக்கு அமைய குறித்த கைது இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், சந்தேக நபர்கள் வங்கியின் பாதுகாப்பு கெமராக்களை செயலிழக்க செய்துவிட்டு, வங்கியின் பின் கதவால் நுளைந்து...